Search This Blog

Sunday, February 07, 2016

மகாமக மகாத்மியம்!


பிரளயமாகிற பேரழிவு நிகழப் போவதன் துவக்கத்தை உணர்ந்து கவலையுற்ற பிரம்மனுக்கு சிவனார் வழிகாட்டினார். அதன்படி, ஜீவன்களை, படைப்பின் கலன்களை, அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் வைத்து இமயத்தின் உச்சியில் வைத்தார் பிரம்மன்.

பிரளயம் வந்தது. உலகெல்லாம் நீரில் மூழ்க, நீரின் அலைகள் இமயத்தின் உச்சியைத் தொட்டன. அப்போது, அந்த அமுதக் கும்பமானது, நீரலைகளில் அடித்து வரப்பட்டது. அது, குடந்தை பகுதியில் வந்தபோது, பிரளய நீர் வடிந்து, கும்பம் தரை தட்டி நின்றது. பிரம்மனுக்கு உதவும் பொருட்டு, சிவபெருமான் வேடுவ உருவம் தாங்கி, தனது வில்லில் நாண் ஏற்றினார். சிவனாரின் பாணம் பாந்து, கும்பத்தின் மூக்கு சிதறித் தெறித்தது. அப்போது கும்பத்தில் இருந்து அமுதம் பெருக்கெடுத்து, குளமா நிறைந்தது. அந்தக் குளமே தற்போது நாம் காணும் மகாமகக் குளம்.

குடத்தின் மூக்குச் சிதறுண்டதால், குடமூக்கு என்றும், கும்பகோணம் எனவும் வழக்கப்பட்டது. குடத்திலிருந்த அமுதம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங்களிலும் பாந்து அப்பகுதிகளைச்
செழுமையாக்கியது. இதன் பின்னர் பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெரு மானிடம் அனுமதி கேட்டார். அவர் அருளியபடி, பிரம்மன் பூர்வபட்ச அசுவதி நாளில் கொடியேற்றம் செய்து, பெருமானையும் தேவியையும் எட்டு நாட்கள் எழுந்தருளச் செய்தார். தொடர்ந்து, ஒன்பதாவது நாள் மேரு மலைபோலும் உயர்ந்த தேரில் பஞ்சமூர்த்திகளை எழுந்தருளச் செய்து, பத்தாவது நாளான மக நன்நாளில் பஞ்ச மூர்த்திகளை வீதி உலா அழைத்து வந்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசி மகவிழாவைத் துவக்கி வைத்தார். இவ்வாறு பிரம்மனே துவக்கி நடத்தி வைத்த விழா எனப் பெருமை பெற்றுத் திகழ்கிறது, மாசி மக விழா.

இத்தகைய புராண வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட மகாமக தீர்த்தக் குளத்துக்கு தீர்த்தச் சிறப்பு கிடைத்தது நவநதி கன்னியர்களால்!

நீர், நம் அழுக்கைக் களைவது. நம் பாவங்களைப் போக்கி நம்மைத் தூமையாக்குவது. அதனால்தான் நதிகள் புனிதமாயின. நதி நீராடல் புனிதமாயிற்று. இப்படி, மனிதர்கள் தங்கள் பாவங்களைக் கழுவ புண்ணிய நதிகளில் மூழ்கித் திளைக்க, நதிகள் எல்லாம் அவர்களைக் கழுவிப் பாவங்களைச் சுமக்கத் தொடங்கின. ஒருகட்டத்தில் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து, சரயு உள்ளிட்ட நவநதிகளும் நவ கன்னியர்களா மாறி, கயிலாயத்தை அடைந்து
சிவபெருமானைத் துதிக்க, பெருமான் அவர்களுக்கு அருளினார். அதன்படி, அவர்களை காசியிலிருந்து குடந்தை நகருக்கு அழைத்து வந்து, மாசி மக நன்னாளில் மகாமகக் குளத்தில் ஒன்றுசேர்ந்து புனித நீராடச் சோன்னார். நவ நதி கன்னியரும் குளத்தில் நீராடி, ஆதிகும்பேஸ்வரரை பூஜித்து, தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று தூமை அடைந்தனர்.

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப் பதும், தொடுவதும், பருகுவதும், அதில் நீராடு வதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இந்த தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

செங்கோட்டை ஸ்ரீராம்

No comments:

Post a Comment