Search This Blog

Sunday, May 31, 2015

மின்சாரம் தரும் சூரியத் தகடுகள்!

மனித வரலாற்றில் அரிய கண்டுபிடிப்புகளின் வரிசையில் முக்கியமான இடத்தைப் பெறுவது மின்சாரம். இந்த மின்சாரத்தை மனிதன் ஆரம்பத்தில் தண்ணீரிலிருந்து, நெருப்பில் இருந்து உருவாக் கினான். ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பது தடைபட்டது. நிலக்கரி, பெட்ரோல் தட்டுப்பாடு வந்தபோது மின்சார உற்பத்தி குறைந்தது.


எனவே, மின்சாரம் தயாரிக்க அள்ள அள்ளக் குறையாத சக்தி ஒன்று மனிதனுக்கு தேவைப்பட்டது. அதுதான் சூரிய சக்தி. 1897-ம் ஆண்டு பிரான்க் ஷூமேன் என்பவர் (Frank Shuman) சூரிய வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கக்கூடிய நோக்கில் ஆராய்ச்சியைத் துவங்கினார். 1908-ல் சோலார் மின் நிலையங்களை உருவாக்கி மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று ஒரு அமைப்பை வடிவமைத்துக் காட்டினார். பின்னர் 1912-ல் எகிப்தில் முதல் சோலார் மின் நிலையத்தை நிறுவி சூரிய சக்தியில் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை  நிரூபித்தார்.

சோலார் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்ட பின்பு, ஒவ்வொரு சாதனத்திலும் சோலார் பலகையைப் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் அந்த சாதனத்தை இயங்க வைக்க முடியும் என்று நிரூபித்தனர். உதாரணமாக, சோலார் தகடு பொருத்தப்பட்ட தெரு விளக்குகள், சூரிய ஒளியால் இயங்கும் மின்விசிறி என புதுமைகள் அரங்கேறின.


இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, விமானத்தில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு உலகம் முழுவதையும் சுற்றிய சோலார் இம்பல்ஸ் விமானத்தையும் வெற்றிகரமாக இயக்கியுள்ளனர். ஆறுகளை சோலார் தகடுகளால் மூடி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குஜராத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு தராத வகையில் சோலார் மின் உற்பத்தி உள்ளது. வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை அரசிடம் இருந்து எதிர்பார்க்காமலும், நாட்டின் எரிபொருள் வளத்தைக் குறைக்காமலும் இருக்கும் விதத்தில் உள்ள சூரிய மின்சாரமே எதிர்கால மின்தேவைக்கு  ஆதாரம்!

ச.ஸ்ரீராம்

1 comment:

  1. நுட்பங்களை தெளிவாக புரியும் படி எழுதுகிறீர்கள் வாசிக்க ஆர்வமாக உள்ளது நன்றி

    ReplyDelete