Search This Blog

Tuesday, May 12, 2015

ஆன்லைன் ஷாப்பிங்

ரு பொருளை வாங்க வேண்டும் எனில், சந்தைகளில் அலைந்து திரிய வேண்டிய சூழலே முன்பு இருந்தது. பிறகு,  ஒவ்வொரு தெரு விலும் கடைகள் வரத் தொடங்கின. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிற மாதிரி சூப்பர் மார்க்கெட்டுகள் வந்தன.

ஆனால், கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களின் விளைவாக கடைக்குப் போய் பொருட்களை வாங்காமல், கடைகளையே வீட்டுக்குக் கொண்டு வந்தது ஆன்லைன் ஷாப்பிங்.


இந்த ஆன்லைன் ஷாப்பிங் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. 1979-ம் ஆண்டு மைக்கேல் ஆல்ட்ரிச் என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டறிந்தார். வீடியோடெக்ஸ் என்ற முறையில் டிவியுடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய கணினி அமைப்பு மூலம் பொருட்களை விற்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

1990-ம் ஆண்டு இணையம் (WWW, அதாவது World wide web) உருவான பின் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளரத் தொடங்கியது. 1994-ம் ஆண்டு இன்டர்நெட் ஷாப்பிங் நெட்வொர்க் எனும் நிறுவனம் முதலில் பாதுகாப்பான ஆன்லைன் வர்த்த கத்தை துவங்கியது. பின்னர் அமேசான் 1995-லும்,  உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் 2003-லும் தொடங்கியது. இந்திய நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ என்ற பெயரில் ஒரே நாளில் நாடு முழுக்க பிரபலமானது.

இன்றைக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை மக்களுக்கு நன்கு பழக்கப்படுத்திவிட்டன. என்ன வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடுகிற அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. பொருட்கள் மட்டுமல்ல, மதிய உணவைக்கூட ஆன்லைனில் ஆர்டர் செய்யும்  அளவுக்கு மாற்றங்கள் வந்திருக்கின்றன.

இருந்த இடத்தில் இருந்தபடி பொருட்களை வாங்க உதவும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் உண்மை யிலேயே ஆச்சரியம் தருபவைதான்!
ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment