Search This Blog

Saturday, April 25, 2015

நினைவை எடுத்துச் செல்லும் பென்டிரைவ்கள்!

ஒரு மனிதன் எத்தனை விஷயங்களைதான் நினைவில் வைத்துக்கொள்வான்? பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கணினியில் நினைவகங்களை உருவாக்கினான்.

கணினி நினைவகங்களில் உள்ள பெரிய சிக்கல், அது ஒரே இடத்தில் நிலையாக சேமிக்கப் பட்டிருப்பதே. அதை இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல  இன்டர்நெட்டைக் கண்டு பிடித்தான். அப்போதும் குறிப்பிட்ட அளவிலான தகவல்களை மட்டுமே கொண்டுசெல்ல முடிந்தது.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக ஃப்ளாப்பி டிரைவ்களும், சி.டி-க்களும் வந்தன. ஆனால், அதிலும் சில சிரமங்கள். இவை வடிவத்தில் தட்டையாகவும், வட்டமாகவும் இருந்ததால் பயணங்களின்போது எளிதில் உடைந்துபோயின. இதன் மீது சிறு கீறல் விழுந்தாலும் தகவல்களை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.


இந்த பிரச்னையைச் சமாளிக் கும் விதத்தில் கண்டுபிடிக்கப் பட்டவைதான் பென்டிரைவ்கள். இந்த கண்டுபிடிப்புக்கு பின்னால் மிகப் பெரிய சர்ச்சையே இருந்தது. 1999-வது வருடம் ட்ரெக் டெக்னாலஜி மற்றும் நெடெக் டெக்னாலஜி என்ற இரு நிறுவனங் களும் பென்டிரைவுக்கான காப்புரிமையைப் பெற்றன. சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ட்ரெக் டெக்னாலஜி நிறுவனம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து நீதிமன்றம் அதன் இங்கிலாந்து காப்புரிமையை நிராகரித்தது.

பின்னர் அனைத்து நிறுவனங்களும் இந்த பென்டிரைவ் களை உற்பத்தி செய்யத் துவங்கின. முதலில் 8 எம்.பி. அளவுக்கு செய்யப்பட்ட இந்த ப்ளாஷ்டிரைவ் எனப்படும் பென்டிரைவ்கள், இன்று 128 ஜி.பி. அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, நல்ல தரத்தில் 60 ஹாலிவுட் படங்களை பதிவு செய்துவைத்து கொள்ளும் அளவுக்கு இந்த பெண்டிரைவ்களின் மெமரி இன்று அதிகரித்துள்ளது.

இன்று அலுவலகத்துக்கோ அல்லது கான்ஃப்ரன்ஸ்களுக்கோ லேப்டாப்களை சுமந்து செல்லாமல் எளிதாக தகவல்களை எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த பென் டிரைவ்கள்தான் நம் நினைவுகளை சிறிதும் பாதிக்காமல் வெகு தொலைவுக்கு எடுத்து செல்கின்றன என்றால் அது மிகையில்லை!

ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment