Search This Blog

Saturday, December 27, 2014

ஐ.ஆர்.டி.சி. இணையதளம்


இந்தியாவில் இணையதளத்தில் ஆன்லயனில் ஆர்டர் செய்துப் பொருட்களை வாங்கும் பாணி மெல்ல அதிகரித்து, நேரடி விற்பனையாளர்களை அச்சப்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை இதை அதிகம் விரும்புவதற்குக் காரணம் விலை, மற்றும் வீடுதேடி வந்து அவர்களுக்காகக் காத்திருக்கிறது என்பதுதான், கடந்த சில மாதங்களில், பிலிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள் ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் விற்பனை இலக்கை கோடிகளில் நிர்ணயத்து வெற்றிகரமாக அதை அடைந்தார்கள். 

இந்த ஆண்லைன் விற்பனையை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இந்திய ரெயில்வே என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.2002ம் ஆண்டில் ஐ.ஆர்.டி.சி. இணையதளம் தொடங்கப்பட்டபோது நாள் ஒன்றுக்கு விற்பனையான டிக்கெட்டுகள் 27 மட்டுமே! ஐ. ஆர்.டி.சி. என்பது ரெயில்வே நிர்வாகத்தின் கேட்டரிங், மற்றும் சுற்றுலா பிரிவு. பயணத்தில் பாதுகாப்பான உணவு விற்பதுதான் இவர்களின் முக்கிய பணி. ஆன்லைன் டிக்கெட் விற்பனையை செய்ய ஒரு தனி நிறுவனம் அவசியமானபோது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட இதையே பயன்படுத்தத் தொடங்கினார்கள். இப்போதும் தொடர்கிறார்கள். இப்போது டிக்கெட் விற்பனைதான் முக்கிய பிஸினஸ். கடந்த ஆண்டு (20012-13) விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்கள் 12,419 கோடிகள். இந்த ஆண்டு 2013-14 விற்பனை 15,410 கோடிகள். வளர்ச்சி வீதம் 24%. இந்தியாவின் அனைத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் மொத்த விற்பனையை விட இது மிக அதிகம். ஆசிய-பசிபிக் மண்டலத்திலேயே மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக (இ-காமர்ஸ்) இணையதளம் இப்போது ஐ.ஆர்.சி.டி.சி.தான்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய அதிவேக சர்வர்கள் மூலம் தளத்தை நிர்வகிக்கிறார்கள். வேகம் அதிகரித்து இணைய பக்கங்கள் ஜிவ்வென்று பறக்கிறது. விழாக்காலங்களில் விற்பனை தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிவடைகிறது. நேரடி புக்கிங் கவுண்ட்டர்கள் காத்தாடுகின்றன. 

ஐ.ஆர்.டி.சி.யில் ஆன்லைனில் டிக்கெட் வாங்க நீங்கள் விபரங்களை முன் பதிவு செய்துகொண்டு பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி உபயோகிக்க வேண்டும். இப்படி இவர்களிடம் பதிவு செய்திருப் பவர்கள் 2.1 கோடி பேர். ஒரே நிறுவனத்தில் இப்படி பதிவு செய்துக் கொண்டிருப் பவர்கள் ஆசியாவில் வேறு எங்குமில்லை. இதைக் கவனித்த அமோசன், பிளிப்கார்ட் போன்ற புத்திசாலி நிறுவனங்கள் ஐ.ஆர்.டி.சி. மூலமே உறுப்பினர்களுக்கு பொருள்களை விசேஷ சலுகை விலையில் விற்பது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முடிவானால் ஐ.ஆர்.டி.சி. உறுப்பினர்களுக்கு ‘59% தள்ளுபடியில் டிராவல் பேக், ஒரு வாட்டர்பாட்டில் இலவசம்’ என்ற விளம்பரங்கள் வரலாம். 

ரமணன்

No comments:

Post a Comment