Search This Blog

Friday, September 19, 2014

மனநோய்க்கு என்ன மருந்து?

 
உடம்புக்கு நோய் வந்தால் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், மனசுக்கு நோய் வந்தால் என்ன செய்வது? அதற்கும் அற்புதமான மருந்து உண்டு என்கிறார் சுவாமி சின்மயானந்தா.
 
முதலில் மனநோய் வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அகங்காரம் என்ற விஷக்கிருமிதான் பெரும்பாலான, மாசுபட்ட மனங்களுக்குக் காரணமாக அமைகிறது. இந்த அகங்காரம் மனசின் மீது மட்டுமில்லாமல், அறிவு, ஆரோக்கியத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி உடல் நலத்தையும் கெடுக்கிறது. இந்தக் கிருமியை அழிக்க மனசை மாசு என்னும் பிணியிலிருந்து காக்க வைத்தியம் உண்டு. அருமையான மருந்தும் உண்டு. என்ன மருந்து அது?
 
விசுவாசம்-11 கிராம், ஒழுங்கு-10 கிராம், நேர்மை- 8 கிராம், உறுதி - 9 கிராம், முயற்சி -7 கிராம், அன்பு உதவும் மனப்பாங்கு- 6 மி.லிட்டர், சுத்தம்-3 மி.லிட்டர் என்ற அளவில் இந்த குணாதிசய மருந்துகளை அறிவு என்னும் பாட்டிலில் போட்டு ஒன்றாகக் குலுக்குங்கள். இந்த மருந்தை உட்கொண்ட பிறகு மன அடக்கம் என்ற மூடியைப் போட்டு, பாட்டிலை இறுக மூடி விடுங்கள். இதனுடன் வேறு சில குறிப்புகளையும் நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
 
*‘அவதூறு’ வம்பைச் சிறிதும் ருசிக்க விரும்பாதீர்கள். அந்த ஆசை வரும் போது ‘ஓம்’ என்ற ஜபத்தை அதிகமாகப் பருகுங்கள்.
* மிருக இச்சை, காம உணர்வு போன்ற பாதைகளில் செல்லாதீர்கள்.
* தியானத்தில் ஓய்வெடுங்கள். ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளுங்கள்.
* தினமும் ஒரு வேளை ‘உபநிஷத்’ என்னும் ‘சூப்’பைப் பருகுங்கள்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு நாளும் மூன்று முறை இரண்டு பத்தி ‘பகவத் கீதை’யைப் பருகுங்கள். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். அப்புறமும் மனநோய் அறிகுறி தொடர்ந்து இருக்குமானால் இந்த மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் - என்று மனநோய்க்கு இந்த மருத்துவச் சிகிச்சையை அளித்தவர்- சுவாமி சின்மயானந்தா அவர்களே!

ஆர். சந்திரிகா,
 

No comments:

Post a Comment