Search This Blog

Tuesday, September 23, 2014

கிண்டில்!

கிண்டில்! 

செய்தித்தாள்கள் தொடங்கி, புத்தகங்கள் வரை இளைய தலைமுறையின் சாய்ஸ்... இ-பேப்பர்தான். இதைத் தனக்கான வாய்ப்பாக்கிக் கொண்டுவிட்ட 'அமேசான்’ நிறுவனம், 'கிண்டில் பேப்பர்வொயிட்' (Kindle Paperwhite) எனும் சாதனத்தை வெளியிட்டுள்ளது. இ-புத்தகங்களைப் படிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள இதன் மூலமாக, 1,100 இ-புத்தகங்களை சேமித்துப் படிக்கலாம். ஆன்லைனில் உள்ள 30 ஆயிரம் இலவச இ-புத்தகங்கள் உள்ளிட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான கட்டண இ-புத்தகங்களையும் டவுன்லோடு செய்து படிக்கலாம். செல்போன் போலவே சார்ஜ் செய்து, அதிக பட்சம் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இது 6,000 ரூபாய் முதல் கிடைக்கும்.


Redmi Note!
செல்போன் மற்றும் நோட் பேடுகளால் கவரப்பட்டு, எந்த மாடலை வாங்கு வது, எதை விடுவது என்று யோசிப்பதற்குள், அவற்றைவிட கூடுதல் சிறப்பு மற்றும் வசதிகளு டன் அடுத்த மாடல் வந்து நம் கவனத்தை ஈர்க்கிறது. இந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'Xiaomi Redmi Note’  பலருக்கும் பிடித்துப் போய் பில் போட வைத்துவிட்டது. இரண்டு சிம் கார்டு, எடை (199கிராம்), 8 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை எக்ஸ்டர்னல் மெமரி, வய்ஃபை, 13 மெகாபிக்ஸல் கேமரா, 5 மெகாபிக்ஸல் முன்புற கேமரா, ஆண்ட்ராய்டு ஓ.எஸ் என்று அடங்கிக் கிடக்கும் ஆச்சர்யங்கள் பலப்பல! இதன் விலை 9,999 தொடங்கி, 14,499 வரை.! 

இனி எந்நாளும் 'குட் நைட்’!
தாம்பத்யம் திருப்திகரமாக அமையாமல் போக, பதற்றம் (anxiety), பயம் (fear) மற்றும் அறியாமை (ignorance) ஆகியவைதான் முதன்மைக் காரணங்கள். இதில் அறியாமையைக் களைவதற்கான வழிகளை தரமானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அழகாக வலியுறுத்துகிறது இந்தப் புத்தகம்.
புத்தகத்திலிருந்து சில வரிகள்...

முகேஷ் - சரண்யாவுக்கு முதல் நாள்தான் திருமணம். அன்று அவர்களின் தலை மேல் விழுந்த அட்சதைகளின் எண்ணிக்கையைவிட, இன்று அதிகாலையில் மணமகனை நோக்கித் தெறித்த வார்த்தைகள் அதிகம். திருமணம் ஆன அன்றே அவர்களுக்கு முதல் இரவு. வாலிபமும் வளமையும் சேர்ந்து எத்தனை தடவை கியர் போட்டாலும் முகேஷால் சரண்யாவை திருப்திப்படுத்தவே முடியவில்லை. ஒரு பெண்ணை முதல் இரவில் திருப்திப்படுத்தத் தெரியாதவனுக்கு இந்த சமூகம் தருகிற பெயர் 'ஆண்மைஇல்லாதவன்’. இதற்கெல்லாம் தீர்வு வழக்கறிஞரும் மருத்துவரும் மட்டும்தானா?


ரைஸ் பக்கெட் சேலஞ்ச்!
பக்கெட் சேலஞ்ச் வரிசையில், ஊடக வியலாளர் மஞ்சுலதா உருவாக்கி இருக்கும் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' செம ஹிட். 'ஏழைகளுக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்ய வேண்டும்' என்பதுதான் சேலஞ்ச்.

தன் பகுதியில் வசிக்கும் சிலருக்கு அரிசியைக் கொடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பினார் மஞ்சு. அவரின் நண்பர்களும் இதைத் தொடர, 10 நாட்களுக்குள்ளாகவே 5 லட்சத்துக்கும் அதிகமான வர்களைச் சென்று சேர்ந்தது. இந்தியா முழுக்க பிரபலமாகியிருக்கும் இந்த ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை 25,000 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

இதற்காக, மஞ்சுவுக்கு, 'ஐகாங்கோ' (iCONGO) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பும், ஐ.நா-வும் இணைந்து கர்மவீர் விருதை வழங்கவிருக்கின்றன. 2015 மார்ச் 23-ல் டெல்லியில் நடைபெறும் விழா வில் இந்த விருது வழங்கப்படும்.

No comments:

Post a Comment