Search This Blog

Friday, July 11, 2014

பிரேஸில் கால்பந்து


கால்பந்து உலகக் கோப்பை பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. பிரேஸில்தான் உலகின் மையமாக இருக்கிறது. 1950க்குப் பிறகு பிரேஸிலில் உலகக் கோப்பைப் போட்டி நடக்கிறது. 1950ல் ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்றது. இந்த முறை 12 மைதானங்களில். அப்போது 13 அணிகள். இப்போது 32 அணிகள். அப்போது இறுதிப் போட்டியில் யாரும் எதிர்பாரதவிதமாக உருகுவேயிடம் தோற்றுப் போனது பிரேஸில். பிரேஸில் கால்பந்து ரசிகர்களால் அதை மறக்கவே முடியாது. இன்றைக்கும் அது சோக காவியமாகப் பேசப்படுகிறது. பிறகுதான் பீலே என்றொரு வீரர் உருவானார். லட்டு லட்டாக பிரேஸிலுக்கு மூன்று உலகக் கோப்பைகளை வாங்கித் தந்தார். பீலே, மரடோனா, ரொனால்டோ என்று உலகக் கோப்பை அளித்த மகா ஆட்டக்காரர்கள் பலர் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். 

மெஸ்ஸி (அர்ஜெண்டினா), ரொனால்டோ (போர்ச்சுகல்), நெமர் (பிரேஸில்) கோஸ்டா (ஸ்பெயின்) வான் பெர்ஸி (நெதர்லாந்து), மார்கோ ரியுஸ் (ஜெர்மனி), ரூனி (இங்கிலாந்து), லுயிஸ் சுவரேஸ் (உருகுவே), ஈடன் அசார்ட் (பெல்ஜியம்), பிராங்க் ரிபர் (பிரான்ஸ்) ஆகிய 10 வீரர்கள் இந்தப் போட்டியில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை இந்த 10 பேரில் ஒருவர்தான் தட்டிச் செல்வார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

மெஸ்ஸி சென்ற உலகக் கோப்பையில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றிவிட்டார். ஆனால் அவருக்கு ஆதரவு அளிக்கிறார் மாரடோனா. மெஸ்ஸி, உலகக் கோப்பையில் கோல்கள் அடித்துதான் தன்னைச் சிறந்த வீரர் என்று நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் ஏற்கெனவே தன்னை நிரூபித்து விட்டார்" என்கிறார். ஆனால் மெஸ்ஸியோ, ஒரு கால்பந்து ஆட்டக்காரர் உலகக் கோப்பையில் தன்னை யார் என்பதை நிரூபித்தாக வேண்டும்" என்று ஒப்புக்கொள்கிறார். எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த வீரர் நட்சத்திர அந்தஸ்த்தை அடைவார் என்று இந்த உலகக் கோப்பையில் ஏகப்பட்ட பரபரப்புகள்.

No comments:

Post a Comment