Search This Blog

Friday, July 04, 2014

நாட்டின் மிகப்பெரிய சோலார் தர்மல் பிளாண்ட்

 
இன்றைய உலகின் வளர்ச்சி என்பது மின் ஆற்றலைச் சார்ந்துள்ளது. தற்போது, நிலக்கரி, நீர், காற்று, சூரிய ஒளி, அணு உலை போன்றவற்றின் மூலம் மின்ஆற்றலைப் பெற்றுவருகிறோம். 
 
புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், எரிபொருள் விலை உயர்வு போன்றவை மனித இனத்தின் முன் நிற்கும் பேராபத்துகள். காற்று, நீர், சூரியஒளி மூலம் மின்சக்தி பெறுவது பாதுகாப்பானது. ஆனால், நீர் மற்றும் காற்று மூலம் கிடைக்கும் ஆற்றல் நிரந்தரமாக ஒரே சீராகக் கிடைப்பதில்லை.  இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு மரபுசாரா எரிசக்திகளான காற்றாலை, சோலார், உயிர்ம எரிபொருள் போன்றவையே சரியான வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆண்டின் 365 நாட்களும் நமக்குச் சூரிய ஒளி கிடைக்கிறது. வெப்ப மண்டல நாடான இந்தியா இப்போது சூரிய ஒளியில் இருந்து எடுக்கும் மின்சாரத்தின் அளவு ஒரு சதவிகிதம்தான். சூரிய வெப்பம் மூலமான ஆற்றல் பெறுதல் நிரந்தரமானது. இது குறித்து யார் யோசித்தார்களோ என்னவோ ஆன்மிகம் சார்ந்தவர்கள் யோசித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய சோலார் தர்மல் பவர் பிளான்ட் (Solar Thermal Power Plant) உருவாகி வருவது குறித்துச் சொன்னார்கள். மவுன்ட் அபு ரோட்டில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சாந்திவனம் (Shantivan) வளாகத்தில் இதன் அலுவலகம் இருக்கிறது. சாந்திவனம் அருகிலேயே இந்த பவர் பிளான்ட் வளாகம் இருந்தது. இந்தத் திட்டத்துக்காக இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஒரு பகுதி நிதியை அளிக்கிறது. அத்துடன் ஜெர்மன் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தியிலிருந்து பாதுகாப்பு (பி.எம்.யூ.) அமைப்பும் ஒரு பகுதி நிதியளிக்கிறது. 
 
இங்கு தற்போது ஐம்பது பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.நாட்டில் 30 கோடி மக்களுக்கும் மேலாகச் சரியாக மின்சார வசதி இல்லாத நிலையில், பல தொழில்துறைகளும் மின்சாரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய சூரிய மின்சக்தி உற்பத்தி பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்குப் பெரிய உதவியாக இருக்கும். தமிழகமும் இந்த முறையிலான மின் உற்பத்தியில் இறங்கலாமே.

No comments:

Post a Comment