Search This Blog

Tuesday, March 18, 2014

இன்ஷூரன்ஸ்:புதிய விதிமுறைகள் யாருக்கு பயன்?

இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ தெரிவித் திருந்தது. இதன் விளைவாக இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப்பிறகு வெளியான புதிய விதிமுறைகளுடன்  ஏறக்குறைய 500 புதிய பாலிசிகள் சந்தைக்கு வந்துள்ளது.

கூடுதல் கவரேஜ்!
''டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை எந்தப் புதிய மாற்றமும் செய்யப்படவில்லை. லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்தான் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது ஐ.ஆர்.டி.ஏ. இதிலும் குறிப்பாக, எண்டோவ்மென்ட் பாலிசிகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. இதன்படி, ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு வெளியான பாலிசிகளில் இன்ஷூரன்ஸ் எடுத்த பாலிசி தாரருக்கு அதிக அளவிலான கவரேஜ் இருக்கும். அதேநேரத்தில், முதலீட்டுப் பகுதி குறைவாக இருக்கும். இன்ஷூரன்ஸ் என்பதே பாதுகாப்புக்காகத்தான் என்பதால், கவரேஜ் அதிகமாக இருக்குமாறு பாலிசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


மேலும், ரெகுலர் பிரீமியம் செலுத்தும் பாலிசிகளில் 45 வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆண்டு பிரீமியத் தொகையில் 10 மடங்கு கவரேஜ் கிடைக்கும் வகையிலும், 45 வயதுக்கு அதிகமானவர்களுக்கு 7 மடங்கு கவரேஜ் தொகை கிடைக்கும் வகையிலும் பாலிசிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

சரண்டர் மதிப்பு உயர்வு!

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மறுசீரமைப்பு செய்தபிறகு வெளியான பாலிசிகளில் சரண்டர் மதிப்பு அதிகமாக இருக்கும். அதாவது, சரண்டர் செய்யும் காலத்தைப் பொறுத்துச் செலுத்திய பிரீமியத்தில் குறைந்தபட்சம் 30-லிருந்து அதிகபட்சம் 90% வரை சரண்டர் மதிப்பு கிடைக்கும்.

10 வருட பாலிசிகளை  மூன்று வருடம் பிரீமியம் செலுத்தினால்தான் சரண்டர் செய்ய முடியும் என்பதைத் தற்போது 2 வருடமாகக் குறைத்துள்ளார்கள். அதேசமயம் 10 வருடங்களுக்குமேல் உள்ள பாலிசிகளை 3 வருடம் பிரீமியம் கட்டியிருந்தால் மட்டுமே சரண்டர் செய்ய முடியும். மேலும், சரண்டர் மதிப்பில் முதல் பிரீமியம் கழிக்கப்பட மாட்டாது.  பாலிசி எடுத்து 4-7 ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்யப் பட்டால் செலுத்திய பிரீமியத்தில் 50 சதவிகிதமும், கடைசி 1-2 ஆண்டு களுக்குள்  சரண்டர் செய்தால் 90% வரையிலும் பணம் திரும்பக் கிடைக்கும்.

இறப்பு பலன் அதிகம்!
புதிய விதிமுறைகளின்படி, பாலிசி முதிர்வடைவதற்கு முன்பே பாலிசிதாரர் இறக்க நேரிட்டால் கிடைக்கும் கவரேஜ் தொகையின் அளவையும் ஐ.ஆர்.டி.ஏ அதிகரித் துள்ளது. அதாவது, சிங்கிள் பிரீமியம் செலுத்தும் பாலிசியில் பாலிசிதாரர் 45 வயதுக்குக் கீழ் இருந்தால் செலுத்திய பிரீமியத்தில் 125 சதவிகிதமும், 45 வயதுக்கு மேல் இருந்தால் 110 சதவிகிதமும் குறைந்தபட்ச கவரேஜ் தொகையாகக் கிடைக்கும்.

வகைபடுத்தப்பட்ட பாலிசிகள்!
இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் பாலிசிகள் வகைபடுத்தப்பட்டுள்ளன. அதாவது, நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் பாலிசிகளை நான்லிங்க்டு வேரியபிள் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் (Nonlinked Variable Insurance Products) என்றும், வருமானம் மாறிக்கொண்டே இருக்கும் பாலிசிகளை வேரியபிள் லிங்க்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகள் (Variable Linked Insurance Products) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.



இறப்பு விகித அட்டவணை!

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர் களுக்கான பிரீமியம் என்பது இறப்பு விகித அட்டவணையின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப் படும். இப்போது மருத்துவ வளர்ச்சி யின் விளைவாக, சராசரி இறப்பு வயது அதிகரித்துள்ளது. ஆனால், எல்.ஐ.சி மிகவும் பழைய இறப்பு விகித அட்டவணையைப் பயன்படுத்தி வந்தது. இதனால் அந்த பாலிசியின் பிரீமியமும் அதிகமாக இருந்தது. தற்போது புதிய இறப்பு விகித அட்டவணையை எல்.ஐ.சி பின்பற்ற தொடங்கியுள்ளதால், எல்.ஐ.சி நிறுவனம் வழங்கும் பாலிசிகளின் பிரீமியம் குறைய வாய்ப்புள்ளது''.


சரியான வருமானம்!

பாலிசி மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை 6-10 சதவிகிதமாக இருக்கும் என இன்ஷூரன்ஸ் பாலிசி விளம்பரங் களில் சொல்லப்படுகின்றன. இந்த வருமானம் நிச்சயம் கிடைக்குமா என்றால் அது சந்தேகம்தான். எனவே, வருமானம் பற்றிச் சொல்லப்படும் அனுமானங்கள் சரியாக இருக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ சொல்லியுள்ளது. பாலிசிகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 4-8 சத விகிதத்தில் கிடைக்கும் வருமான அட்டவணைகளை மட்டுமே விளம்பரங்களில், பாலிசி விளக்க ரசீதுகளில் பிரசுரிக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ வலியுறுத்தியுள்ளது.

குறுகிய கால பாலிசிகள்!

இதுவரை குறைந்தபட்சம் 10 ஆண்டு களுக்கான எண்டோவ்மென்ட் பாலிசிகளே நடைமுறையில் இருந்தன. இப்போது 5 ஆண்டுகளுக்கான எண்டோவ்மென்ட் பாலிசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  

சேவை வரி!

பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரீமியத்துக்கான சேவை வரியை 2013 வரை எல்.ஐ.சி.யே செலுத்தி வந்தது. பாலிசியில் கிடைக்கும் போனஸ் தொகையில் அந்தச் சேவை வரி கழித்துக்கொள்ளப்பட்டது. இனிமேல் சேவை வரி பாலிசிதாரர்தான் செலுத்தவேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ தெரிவித்துள்ளது. இதனால் பாலிசியின் பிரீமியம் அதிகரிக்கும். அதேநேரத்தில் போனஸ் தொகை அதிகமாக கிடைக்கும். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே சேவை வரியை பாலிசிதாரர்களிடம்தான் வசூலித்து வந்தது. பாலிசி எடுத்த முதல் வருடம் 3.09 சதவிகிதமும், அடுத்த வருடங்களில் 1.545 சதவிகிதமும் சேவை வரி இருக்கும்.

ஏஜென்ட் கமிஷன்..!

ஐந்து ஆண்டு பாலிசிக்கு முதல் வருடம் பிரீமியம் செலுத்தும்போது ஏஜென்டுக்கு 15 %கமிஷன் கிடைக்கும். அதேநேரத்தில் 10 வருடகால பாலிசி களுக்கு அதிகபட்சமாக 30 சத விகிதமும், 12 வருடத்துக்கு மேற்பட்ட பாலிசிகளுக்கு 35 சதவிகிதமும் கமிஷன் கிடைக்கும். இதுவே 2, 3-வது வருடங்களுக்கு 7.5 சதவிகிதமும், அதற்குப்பின் 5 சதவிகிதமும் கமிஷன் கிடைக்கும்.  இதனால் பாலிசி கட்டணங்கள் குறையும்''
 

No comments:

Post a Comment