Search This Blog

Tuesday, March 04, 2014

அன்னை ஸ்ரீசாரதா தேவி

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு மனைவியாக தட்சிணேஸ்வரம் வந்த  அன்னை சாரதாதேவிக்கு அப்போது வயது 16. அவரிடம், ''என்னை உலகியலுக்குத் திருப்பவா நீ வந்தாய்?'' என்று தம் சந்தேகத்தைக் கேட்டார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

அதற்கு அன்னை சொன்ன பதில் என்ன தெரியுமா?

'''நான் ஏன் உங்களது ஆன்மிக வாழ்க்கையைக் கெடுக்க வேண்டும்? உங்களுக்கு உதவி செய்யவே நான் வந்துள்ளேன்''  என்று புன்னகையோடு கூறியதுடன், குருதேவரின் ஆன்மிக சாதனைகளுக்கு உற்ற துணையாக, தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

ஸ்ரீசாரதாதேவியின் தாய் சியாமளாதேவிக்கு, தன் மகளுக்கு குழந்தை பாக்கியமே கிட்டவில்லையே என்ற குறை இருந்தது. ஒருமுறை, இதுபற்றி அவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடமே கேட்டுவிட்டார்.


அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர், ''ஒரு குழந்தை உங்கள் மகளை அம்மா என்று அழைப்பது பெரிதல்ல. எதிர்காலத்தில் ஆயிரமாயிரம் குழந்தைகள் சாரதாவை அம்மா என்று அழைப்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.

குருதேவரின் வாக்கு எத்தனை நிதர்சனமான உண்மை என்பதைத்தான் நாம் இன்றைக்குக் கண்கூடாகக் காண்கிறோமே!

('அன்னை சாரதா தேவி’ என்ற தலைப்பில் சுவாமி நிகிலானந்தா ஆற்றிய சொற்பொழிவில் இருந்து...)

No comments:

Post a Comment