Search This Blog

Monday, July 15, 2013

வருமான வரித் துறை... நோட்டீஸ் வந்தால்?

கடந்த நிதி ஆண்டில் வருமான வரித் தாக்கல் செய்யாத சுமார் 12 லட்சம் பேருக்கு வருமான வரித் துறை சார்பில் அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு 1.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் சென்றிருக்கிறது. இப்படி நோட்டீஸ் வந்தவர்கள் என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் தவித்துப்போய் கிடக்கிறார்கள். வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்யவேண்டும்? 
 
'வருமான வரித் துறை ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்ப பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை சொல்கிறேன்.
 
அதிக பணப் பரிமாற்றம் செய்பவருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும்;

30 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து விற்று அல்லது  வாங்கி, வரித் தாக்கல் செய்யாமல் விட்டால் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வீடு தேடி வரும்.

அதிகமான வரிச் சலுகை பெற விண்ணப்பித்திருந்தால் அல்லது  வட்டி வருமானத்திற்கு வரித் தாக்கல் செய்யாமல் இருந்தாலும் வருமான வரித் துறையின் நோட்டீஸ் ஒருவருக்கு வரும்.

சொத்துக்களை விலைக்கு வாங்கியவர் வரித் தாக்கல் செய்து, அந்த வருமானத்திற்கு சொத்து விற்றவர் வரித் தாக்கல் செய்யாமல் விட்டிருந்தாலும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும்.

தொடர்ந்து பத்து வருடங்களாக வருடா வருடம் வரித் தாக்கலை முறையாகச் செய்தவர், திடீரென்று செய்யாமல்விட்டாலும் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும் சொத்துக்களை வாங்கி அதற்கு வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் போனாலோ அல்லது குறைவாக காட்டியிருந்தாலோ வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும்'.

''வங்கி, பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற அமைப்புகளில் இருந்து வருடம் ஒருமுறை ஏ.ஐ.ஆர். (Annual Information Return) விவரங்களை வருமான வரித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்பது கட்டாயம். கீழ்க்காணும் நடவடிக்கைகள் ஒருவரால் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், ஏ.ஐ.ஆர். விவரங்கள் பண பரிமாற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும்.  

1. 30 லட்சத்திற்கு மேல் அசையா சொத்துகள், வீடு அல்லது நிலம் வாங்கினால் அதற்கான விவரத்தை நீங்கள் வருமான வரித் துறைக்கு தாக்கல் செய்யாமல் போனாலும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து வருமான வரித் துறைக்கு விவரம் சென்றுவிடும்.

2. மொத்தமாக அஞ்சலக டெபாசிட் ஐந்து லட்சத்திற்கு மேல் செய்தால், அஞ்சல் துறையிடமிருந்து வருமான வரித் துறைக்கு தகவல்கள் செல்லும். 3. மியூச்சுவல் ஃபண்டில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மொத்தமாக முதலீடு செய்தால், வங்கி சேமிப்புக் கணக்கில் மொத்தமாக பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் விவரங்கள் உடனே வருமான வரித் துறைக்கு சம்பந்தப்பட்ட துறையினரால் தெரிவிக்கப்படும்''.

'முதலில் செய்யவேண்டிய வேலை, அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தேதிக்குள், அவர்கள் கேட்டிருக்கும் விவரங்களை சமர்ப்பித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை தரவேண்டும். இப்படி செய்யத் தவறும்பட்சத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் அதிக பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளும்போது நாமாகவே வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது புத்திசாலித்தனம். அப்படி இல்லாமல் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்த பிறகு வரியை செலுத்தும்பட்சத்தில், வரி அதற்கான வட்டி, கால தாமதம் செய்ததற்கு அபராதம் என வரித் தொகைக்கு இணையான அபராதத் தொகையைக் கட்டவேண்டி இருக்கும். சில சமயங்களில் வரித் தொகையைவிட மூன்று மடங்கு அபராதத் தொகை கட்ட நேரலாம். 


 
 

No comments:

Post a Comment