Search This Blog

Sunday, June 16, 2013

ரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ......


சாம்பியன் என்றால் இப்படித்தான் ஒரு வெறியுடன் எழவேண்டும். ரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவருமே பிரெஞ்ச் ஓபன் வெற்றிகள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள். நடால், மிக இளம் வயதில் 8 முறை பிரெஞ்ச் ஓபனை வென்று உலக சாதனை படைத்து இருக்கிறார்.

செரீனா, ஓவைப் பற்றி யோசிக்கும் முப்பத்தொரு வயதில், மிகப்பெரிய உடல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, தம்முடைய 16 வது கிராண்ட்ஸ்லாமை வென்றிருக்கிறார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, பிரெஞ்ச் ஓபனை மீண்டும் வெல்வதுதான் செரீனாவுக்குக் கடும் சவாலாக இருந்தது. முதன்முறையாக, 20வது வயதில் பிரெஞ்ச் ஓபனை வென்றார். அப்போது ஜெனிபர் கேப்ரியாட்டி, மோனிகா செலஸ் போன்றோர் ஆடிய காலம். நடால்கூட ஜூனியர்தான். ஃபேஸ்புக்கூட தோன்றவில்லை. இப்போது, டென்னிஸில், அடுத்த தலைமுறை வந்துவிட்டது. எல்லாச் சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, 11 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சு ஓபனை மீண்டும் வென்றிருக்கிறார் செரீனா. இளம் வீராங்கனைகள் யாரும் அருகில் நெருங்க முடியாத ஆக்ரோஷமான ஆட்டம். சென்ற வருடம் யாரும் எதிர்பாராத விதமாக முதல் சுற்றிலேயே வெளியேறியதால், முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றதுபோல 16வது கிராண்ட்ஸ்லாமின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்.

செரீனா வில்லியம்ஸூக்கு நிகரான, வலுவான மனநிலை கொண்ட ஒரு வீராங்கனையைப் பார்க்க முடியாது. எத்தனை எத்தனை சர்ச்சைகள், ஏற்ற இறக்கங்கள்! 2003இல் தம் சகோதரியைப் பறி கொடுத்தார். 2009 யு.எஸ். ஓபன் போட்டியில், எல்லைக் கோட்டைத் தாண்டி வந்து சர்வீஸ் செய்ததால் தண்டனையாக, புள்ளியை இழந்த செரீனா, ஆத்திரமடைந்து எல்லைக்கோடு பெண் நடுவரை ‘கொன்று விடுவேன்’ என மிரட்டினார். அக்காட்சியை நேரிலும் டி.வி.யிலும் பார்த்தவர்கள் அரண்டு போனார்கள். மோசமான நடத்தைக்காகவும் தமது டென்னிஸ் மட்டையை (ராக்கெட்) கீழே வேகமாக அடித்ததற்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 2010 யு.எஸ். ஓபனில் செரீனா கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த யு.எஸ். ஓபனிலும், எதிராளிடமும் நடுவரிடமும் மோசமாக நடந்து கொண்டு மீண்டும் அபராதத்தைச் சந்தித்தார். செரீனாவை உலகமே கேவலமாகப் பார்த்த தருணம் அது.

2011ம் வருடம் அவரை லேசில் விடவில்லை. முதலில், ஓர் உணவு விடுதியில், அவருடைய கால்களை கண்ணாடி குத்திவிட, பிறகு, இரண்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில், அவருடைய நுரையீரலில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலும் மருத்துவமனையில்தான் நேரத்தைச் செலவழித்தார். டென்னிஸ் விளையாடுவதே சந்தேகம் என்றுதான் சொல்லப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து குணமடைந்து, ஒருவருடத்துக்குப் பிறகு டென்னிஸ் களத்துக்குள் இறங்கினார் செரீனா. அதன் பிறகு செரீனா தொட்டதெல்லாம் பொன். ‘சாம்பியன் என்றால் எத்தனைமுறை பட்டங்களை வெல்கிறேன் என்பது முக்கியமில்லை. தோல்விகளிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் எத்தனைமுறை எழுகிறேன் என்பதுதான் முக்கியம்’ என்று இப்போது உற்சாகப் பேட்டி கொடுத்தார் செரீனா.

இதுவரை பெண்கள் டென்னிஸில் அதிகம் சம்பாதித்தவர், செரீனாதான். இன்றுவரை பெற்ற பரிசுத்தொகை, 235 கோடி ரூபாய்! பிரெஞ்ச் ஓபனை வென்றதற்காக செரீனாவுக்கு பத்தே முக்கால் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் எல்லாம் சேர்த்து 31 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 4 கிராண்ட்ஸ்லாம்களையும் குறைந்தது இரண்டுமுறை வென்றிருக்கிறார். இதுதவிர, ஒலிம்பிக்ஸில் 4 தங்கப்பதக்கங்கள். இந்த வயதில் இவ்வளவு துள்ளலுடனும் வலுவாகவும் ஆடுவது மற்ற வீராங்கனைகளுக்குக் கிலியை ஏற்படுத்துகிறது. அதுதான் செரீனா வில்லியம்ஸ்.

நடாலின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, புலி ஒன்று களமிறங்கி ஆடுகிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த 27 வயதுக்குள், நடால் செய்த சாதனைகளைக் கண்டு அத்தனை டென்னிஸ் பிரபலங்களும் வாயைப் பிளக்கிறார்கள்.

ரோஜர் ஃபெடரரின் சாதனைகள் ஒவ்வொன்றும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இந்த வருடம் பிரெஞ்ச் ஓபனை வென்று, உலக சாதனை படைத்திருக்கிறார். இதுவரை எந்த வீரரும் எட்டு முறை ஒரு கிராண்ட்ஸ்லாமை வென்றதில்லை. கடந்த ஏழு மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நடால், இப்போது முழு உடல்தகுதி பெற்றிருக்கிறார்.

பிரெஞ்ச் ஓபன் என்றால் நடாலுக்குப் பாயசம் சாப்பிடுவதுபோல. முதல் போட்டியிலேயே (2005) கோப்பையைக் கைப்பற்றினார். 2007ல் ஹாட்ரிக் அடித்துக் காண்பித்தார். 2009ல் மட்டும்தான் தோல்வியைச் சந்தித்தார். அந்த ஒரு வருடத்தைத் தவிர, 2005லிருந்து 2013 வரை எல்லா பிரெஞ்ச் ஓபன் கோப்பைகளும் நடாலுக்குத்தான். எல்லோரும் பயப்படும் களிமண் தரையில், நடால் மட்டும் அசைக்க முடியாத சக்தி - ‘கிங் ஆஃப் கிளே.’ ‘5 மாதங் களுக்கு முன்னால், காயம் காரணமாகப் படுக்கையில் கிடந்தபோது, என்னால் இந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று எத்தனை பேர் நினைத்திருப்பார்கள்?’ என்று கேட்கிறார் நடால்.

கடும் போட்டி மனப்பான்மை இருந்தபோதும், ஃபெடரர் - நடால் இடையே எந்தவிதப் பகைமை உணர்ச்சியும் கிடையாது. ‘ஃபெடரரை நான் எதிரி யாக நினைப்பதில்லை. அவர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை’என்கிறார் நடால். ஃபெடரரும் முடிந்தவரை நடாலைப் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.
நடிகன்!

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பாலிவுட் நடிகனாகிவிட்டார். Fugly என்கிற ஹிந்தி திரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். பீஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற விஜேந்தர், சமீபத்தில் பெரும் சர்ச்சை ஒன்றில் மாட்டிக் கொண்டார். ஹெராயின் போதைப் பொருளை உட்கொண்டதாகவும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதாகவும் விஜேந்தர் மீது குற்றம் சுமத்தியது, பஞ்சாப் போலீஸ். ஆனால், தேசிய ஊக்கமருந்துத் தடுப்பு அமைப்பு நடத்திய சோதனைகளில் வெற்றி கண்டு, தம்மைக் குற்றமற்றவராக நிரூபித்தார்.

நடால்: களமிறங்கும் புலி!

சாம்பியன் என்றால் இப்படித்தான் ஒரு வெறியுடன் எழவேண்டும். ரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவருமே பிரெஞ்ச் ஓபன் வெற்றிகள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள். நடால், மிக இளம் வயதில் 8 முறை பிரெஞ்ச் ஓபனை வென்று உலக சாதனை படைத்து இருக்கிறார். 

செரீனா, ஓய்வைப் பற்றி யோசிக்கும் முப்பத்தொரு வயதில், மிகப்பெரிய உடல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, தம்முடைய 16 வது கிராண்ட்ஸ்லாமை வென்றிருக்கிறார். 

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, பிரெஞ்ச் ஓபனை மீண்டும் வெல்வதுதான் செரீனாவுக்குக் கடும் சவாலாக இருந்தது. முதன்முறையாக, 20வது வயதில் பிரெஞ்ச் ஓபனை வென்றார். அப்போது ஜெனிபர் கேப்ரியாட்டி, மோனிகா செலஸ் போன்றோர் ஆடிய காலம். நடால்கூட ஜூனியர்தான். ஃபேஸ்புக்கூட தோன்றவில்லை. இப்போது, டென்னிஸில், அடுத்த தலைமுறை வந்துவிட்டது. எல்லாச் சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, 11 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சு ஓபனை மீண்டும் வென்றிருக்கிறார் செரீனா. இளம் வீராங்கனைகள் யாரும் அருகில் நெருங்க முடியாத ஆக்ரோஷமான ஆட்டம். சென்ற வருடம் யாரும் எதிர்பாராத விதமாக முதல் சுற்றிலேயே வெளியேறியதால், முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றதுபோல 16வது கிராண்ட்ஸ்லாமின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்.

செரீனா வில்லியம்ஸூக்கு நிகரான, வலுவான மனநிலை கொண்ட ஒரு வீராங்கனையைப் பார்க்க முடியாது. எத்தனை எத்தனை சர்ச்சைகள், ஏற்ற இறக்கங்கள்! 2003இல் தம் சகோதரியைப் பறி கொடுத்தார். 2009 யு.எஸ். ஓபன் போட்டியில், எல்லைக் கோட்டைத் தாண்டி வந்து சர்வீஸ் செய்ததால் தண்டனையாக, புள்ளியை இழந்த செரீனா, ஆத்திரமடைந்து எல்லைக்கோடு பெண் நடுவரை ‘கொன்று விடுவேன்’என மிரட்டினார். அக்காட்சியை நேரிலும் டி.வி.யிலும் பார்த்தவர்கள் அரண்டு போனார்கள். மோசமான நடத்தைக்காகவும் தமது டென்னிஸ் மட்டையை (ராக்கெட்) கீழே வேகமாக அடித்ததற்காகவும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 2010 யு.எஸ். ஓபனில் செரீனா கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த யு.எஸ். ஓபனிலும், எதிராளிடமும் நடுவரிடமும் மோசமாக நடந்துகொண்டு மீண்டும் அபராதத்தைச் சந்தித்தார். செரீனாவை உலகமே கேவலமாகப் பார்த்த தருணம் அது.

2011ம் வருடம் அவரை லேசில் விடவில்லை. முதலில், ஓர் உணவு விடுதியில், அவருடைய கால்களை கண்ணாடி குத்திவிட, பிறகு, இரண்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில், அவருடைய நுரையீரலில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலும் மருத்துவமனையில் தான் நேரத்தைச் செலவழித்தார். டென்னிஸ் விளையாடுவதே சந்தேகம் என்றுதான் சொல்லப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து குணமடைந்து, ஒருவருடத்துக்குப் பிறகு டென்னிஸ் களத்துக்குள் இறங்கினார் செரீனா. அதன் பிறகு செரீனா தொட்டதெல்லாம் பொன். ‘சாம்பியன் என்றால் எத்தனைமுறை பட்டங்களை வெல்கிறேன் என்பது முக்கியமில்லை. தோல்விகளிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் எத்தனைமுறை எழுகிறேன் என்பதுதான் முக்கியம்’ என்று இப்போது உற்சாகப் பேட்டி கொடுத்தார் செரீனா. 

இதுவரை பெண்கள் டென்னிஸில் அதிகம் சம்பாதித்தவர், செரீனாதான். இன்றுவரை பெற்ற பரிசுத்தொகை, 235 கோடி ரூபாய்! பிரெஞ்ச் ஓபனை வென்றதற்காக செரீனாவுக்கு பத்தே முக்கால் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் எல்லாம் சேர்த்து 31 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 4 கிராண்ட்ஸ்லாம்களையும் குறைந்தது இரண்டுமுறை வென்றிருக்கிறார். இதுதவிர, ஒலிம்பிக்ஸில் 4 தங்கப்பதக்கங்கள். இந்த வயதில் இவ்வளவு துள்ளலுடனும் வலுவாகவும் ஆடுவது மற்ற வீராங்கனைகளுக்குக் கிலியை ஏற்படுத்துகிறது. அதுதான் செரீனா வில்லியம்ஸ். 

நடாலின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, புலி ஒன்று களமிறங்கி ஆடுகிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த 27 வயதுக்குள், நடால் செய்த சாதனைகளைக் கண்டு அத்தனை டென்னிஸ் பிரபலங்களும் வாயைப் பிளக்கிறார்கள். 

ரோஜர் ஃபெடரரின் சாதனைகள் ஒவ்வொன்றும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இந்த வருடம் பிரெஞ்ச் ஓபனை வென்று, உலக சாதனை படைத்திருக்கிறார். இதுவரை எந்த வீரரும் எட்டு முறை ஒரு கிராண்ட்ஸ்லாமை வென்றதில்லை. கடந்த ஏழு மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நடால், இப்போது முழு உடல்தகுதி பெற்றிருக்கிறார். 

பிரெஞ்ச் ஓபன் என்றால் நடாலுக்குப் பாயசம் சாப்பிடுவதுபோல. முதல் போட்டியிலேயே (2005) கோப்பையைக் கைப்பற்றினார். 2007ல் ஹாட்ரிக் அடித்துக் காண்பித்தார். 2009ல் மட்டும்தான் தோல்வியைச் சந்தித்தார். அந்த ஒரு வருடத்தைத் தவிர, 2005லிருந்து 2013 வரை எல்லா பிரெஞ்ச் ஓபன் கோப்பைகளும் நடாலுக்குத்தான். எல்லோரும் பயப்படும் களிமண் தரையில், நடால் மட்டும் அசைக்கமுடியாத சக்தி - ‘கிங் ஆஃப் கிளே.’ ‘5 மாதங்களுக்கு முன்னால், காயம் காரணமாகப் படுக்கையில் கிடந்தபோது, என்னால் இந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று எத்தனை பேர் நினைத்திருப்பார்கள்?’ என்று கேட்கிறார் நடால். 

கடும் போட்டி மனப்பான்மை இருந்தபோதும், ஃபெடரர் - நடால் இடையே எந்தவிதப் பகைமை உணர்ச்சியும் கிடையாது. ‘ஃபெடரரை நான் எதிரியாக நினைப்பதில்லை. அவர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை’ என்கிறார் நடால். ஃபெடரரும் முடிந்தவரை நடாலைப் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.

No comments:

Post a Comment