Search This Blog

Friday, March 08, 2013

மார்ச் 22 உலக தண்ணீர் நாள்


பூமி 71% தண்ணீரால் சூழப்பட்டது. திட வடிவில் தண்ணீர் பனிப் பாறைகளாக உறைந்திருக்கிறது. ஆறு, குளம், ஏரி, கிணறு, கடல், நிலத்தடி நீர் என்று நீர்மமாக இருக்கிறது. காற்றில் ஈரப்பதத்துடன் வாயு நிலையில் இருக்கிறது. இந்த 71% நீரில் சுமார் 3% நீர் மட்டுமே மனிதர்கள் பயன்படுத்தும் விதத்தில் நல்ல தண்ணீராக இருக்கிறது.

நம் உடல் சுமார் 60-70% வரை நீராலானது. ஒரு நாளைக்கு குறைந்தது சுமார் 7 லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இதில் 2 லிட்டர் வரை நாம் நேரடியாக நீரைப் பருகுகிறோம். மீதி தண்ணீரை உணவு, பழங்கள், பானங்கள் மூலம் நம் உடல் பெற்றுக்கொள்கிறது. நாம் உணவுக்காகச் சார்ந்திருக்கும் தாவரங்கள், விலங்குகள், பறவைகளுக்கும் தண்ணீர் தேவை. இப்படித் தண்ணீர் இன்றி நாம் வாழ முடியாது.

பருவ நிலை மாறுபாடு, மழையின்மை, அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக நாம் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. உலக நாடுகளில் சுமார் 40% மக்கள் தண்ணீர் பற்றாக் குறையால் அவதிப்படுகிறார்கள். சுமார் 100 கோடி மக்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான நீர் கிடைக்கவில்லை. நீர் மூலம் பரவும் நோய்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பலியாகிறார்கள்.
இருக்கும் நீர் ஆதாரங்களை அசுத்தம் செய்யாமல் பாதுகாக்க வேண்டும். நீர் வளத்தைப் பெருக்க வேண்டும்.

மார்ச் 22 உலக தண்ணீர் நாள். இந்த நாளில் சிக்கனமாகத் தண்ணீரை உபயோகப்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம். அதற்கு நாம் என்னென்ன செய்யலாம்?

தண்ணீர் குழாயைத் திறந்து விட்டு பல் தேய்க்க வேண்டாம்.

ஷவரில் குளிப்பதைத் தவிர்த்து, வாளியில் தண்ணீர் பிடித்துக் குளிக்கலாம்.
வீட்டில் உள்ளவர்களின் துணிகளை ஒரே நேரத்தில் துவைக்கலாம்.

செடிகளுக்கு காலையோ, மாலையோ தண்ணீர் விட்டால், குறைவான தண்ணீர் போதும். குழாயிலிருந்து தண்ணீர் விடாமல், வாளியில் பிடித்து ஊற்றவும்.

ஒழுகும் குழாய்களை உடனே மாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment