Search This Blog

Friday, February 08, 2013

அருள்வாக்கு - யார் யார் வாய்க் கேட்பினும்!


அறமும் அறிவு நூலால் வருவதே; அறிவு நூலின் பயனும் அறத்துக்கு உதவ வேண்டுவதே. ஆகையால் இவற்றைப் பிரித்துக்கூடச் சொல்லக் கூடாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு

என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறது.

எந்த விஷயமாகட்டும், அதை யார்தான் எடுத்துச் சொல்லட்டும். அதன் ஸரியான தாத்பர்யம் என்னவென்று பார்த்து ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று அர்த்தம். இப்படிச் சொன்னதால் முதலிலேயே எந்த ஒரு வித்யையும் தப்பு என்று ஒதுக்கி வைத்துவிடாமல் அதிலும் ஏதாவது உசந்த கருத்து இருக்குமா என்று ஆலோசிக்க வேண்டுமென்று ஏற்படுகிறது. அதேபோல, ‘போயும் போயும் இவர்களிடமா கற்றுக் கொள்வது? இவர்கள் சொல்லியா கேட்டுக் கொள்வது?’ என்றெல்லாம் நினைக்காமல், ‘சொல்வது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; சொல்வதில் தாத்பர்யம் இருந்தால் எடுத்துக் கொள்வோம்’ என்று நினைக்க வேண்டுமென்றும் ஏற்படுகிறது. இந்த இரண்டு பண்புகளையும் தர்ம சாஸ்திரங்களில் வெகுவாக ஆதரித்து வற்புறுத்தியிருக்கிறது.

‘விஷயமிருக்கிறதா என்று பார்க்கிறேன்’ என்று பொய் ஸமாதானம் சொல்லிக் கொண்டு, கன்னாபின்னா ஸமாசாரங்களைக் கூட ஒருத்தன் படிக்கலாம். அதாவது ‘எப்பொருளை’யும் படிக்கலாம். ஆனால் உசத்தி தாழ்த்தி பார்க்காமல் ‘யாரார் வாய் கேட்பது’ லேசில் முடியாது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment