Search This Blog

Saturday, May 12, 2012

நிலவில் பள்ளங்கள் ஏன்?


நிலவில் வட்ட வடிவப்பள்ளங்கள் இருக்கிறதே, ஏன்?

அஸ்டிராடுகள் என்று அழைக்கப்படும் பாறைகள், வால் நட்சத்திரங்கள் போன்றவை கடந்த லட்சம் ஆண்டுகளில், மிக வேகத்தில் சந்திரனில் மோதியதால் ஏற்பட்ட பள்ளங்கள்தான் இவை ஜென்னி. சந்திரனில் ஒரு கி.மீட்டர் குறுக்களவு கொண்ட பள்ளங்கள் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. அதைவிடச் சிறிய பள்ளங்கள் ஏராளமாக இருக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாததால் இந்தப் பள்ளங்கள் பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் மாற்றம் ஏதுமின்றி, அப்படியே இருக்கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய ஏரி எது  ?

ரஷ்யாவில் உள்ள பைக்கால் ஏரிதான் இந்தப் பூமியிலேயே மிகப்பெரிய ஏரி விஷ்ணு. இதுதான் உலகின் மிகப்பழைமையான ஏரியும் கூட! பூமியில் மேலிருக்கும் தண்ணீரில் 20 சதவிகிதம் பைக்கால் ஏரியின் தண்ணீர் என்றால் எவ்வளவு பெரியது என்று பாருங்கள்! ரஷ்யாவில் தென் சைபீரியா பகுதியில் இருக்கும் பைக்கால் ஏரி, அந்த நாட்டுக்குத் தேவையான 90 சதவிகித நீரை வழங்குகிறது. 636 கி.மீ. நீளமும் 80 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் சிறியதும் பெரியதுமாக 300 ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.

செஸ் விளையாட்டு எங்கே தோன்றியது ?

செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியாதான். சுமார் 6-ம் நூற்றாண்டில் சதுரங்கம் என்ற பெயரில் விளையாடப்பட்ட விளையாட்டுத்தான் செஸ் விளையாட்டாகப் பின்னர் பரிணமித்தது. பல நாடுகளுக்கும் பரவியது. 15-ம் நூற்றாண்டில் இத்தாலியில் செஸ் விளையாட்டுக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இன்று நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன. 

 

1 comment: