Search This Blog

Sunday, November 20, 2011

அர்ஜூன் டெண்டுல்கர் !


அர்ஜுன் டெண்டுல்கர், 1999 செப்டம்பர் 24-ல் பிறந்தார். சச்சின், இந்திய அரசின் சார்பில் தனக்குக் கிடைத்த முதல் பெரிய கௌரவமான அர்ஜூனா விருதின் நினைவாக, தன் மகனுக்கு 'அர்ஜுன்’ என்று பெயர் வைத்தார்.மும்பையில் நான்கு வருடங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர் களுக்கான தடகளப் போட்டிகள் நடந்தபோது... 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார் அர்ஜுன். முதல் இடம் பிடித்தது... ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
கடந்த ஆண்டு, வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் சச்சின் 44-வது சதத்தை அடித்த அன்று, புனேயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இருந்தார் அர்ஜுன். அன்றுதான், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் எடுத்த ஸ்கோர், பூஜ்ஜியம். எனினும், அடுத்தடுத்த போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்தார்.சச்சினைப் போலவே அர்ஜுனும் ஆல் ரவுண்டர். அப்பாவைத் தவிர, அர்ஜுனுக்கு மிகவும் பிடித்த இன்னொரு கிரிக்கெட்டர், வீரேந்திர சேவாக். சச்சின் பல ஆட்டங்களில் 100-ஐ நெருங்கும்போது, (டென்ஷனில் தொடர்ந்து அவுட் ஆகிக்கொண்டு இருந்தபோது...) 'சேவாக் மாதிரி நீங்களும் சிக்ஸர் அடிச்சு, செஞ்சுரி அடிங்க’ என்பதுதான் சச்சினுக்கு அர்ஜுன் கொடுத்த ஐடியா.

அர்ஜுன் இடது கை ஆட்டக்காரர். ''அர்ஜுன் எங்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது சச்சின் அங்கிள் வந்தால், உடனடியாக பேட்டிங் ஸ்டைலை மாற்றி, டிஃபென்ஸிவாக ஆட ஆரம்பித்துவிடுவான். சச்சின் அங்கிள் இல்லை என்றால், அதிரடி ஆட்டம்தான். சிக்ஸர், பவுண்டரி எனப் பந்து பறக்கும்'' -இது அர்ஜுனுடன் கிரிக்கெட் ஆடும் நண்பர்கள் சொன்னது.உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்ததும், இங்கிலாந்து பயணத்துக்கு மகன் அர்ஜுனையும் அழைத்துச் சென்றிருந்தார் சச்சின். ''இங்கிலாந்து மைதானங்களில் ஆடிப் பழகிவிட்டால், உலகில் எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆட முடியும்'' என்பதுதான் அர்ஜுனுக்கு சச்சின் கொடுக்கும் அட்வைஸ்.சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் விளையாடியதன் நினைவாக... அவரது மகள் சாரா, சச்சினுக்குத் தான் கைப்பட வரைந்த ஓவியத்தைப் பரிசாக அளித்தாள். அர்ஜுன், தானே கிரீட்டிங் கார்டு ஒன்றை வித்தியாசமாக டிசைன் செய்து, பரிசளித்தார்.  சச்சின், தனது 16 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். அர்ஜுனும் அந்த 16-ஐக் குறிவைத்துதான் பயிற்சி பெற்றுவருகிறார் என்கிறார்கள்.

விகடன்

No comments:

Post a Comment