Search This Blog

Tuesday, November 15, 2011

உட்காராதீங்க! - உடல் நலம்

 
நாம் உட்கார ஆசைப்பட்டால் அதுவே நம்மை அழித்துவிடும். உட்காருவதுதான் நம்மைக் கொல்லும் நிஜ கொலையாளி.
 
ஒரே மாதிரி நிலையில் உட்கார்ந்து படிப்பதைக் குறைந்தபட்சம் 30லிருந்து 45 நிமிடத்திற்கு மேல் தவிர்க்கவும்.
 
நடுநடுவே ஏதாவது ஒரு வேலையைச் சாக்காக வைத்துக் கொண்டு எழுந்து நிற்பது, நடப்பது அல்லது கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் செல்வது என்கிற மாதிரி ஓர் ஐந்து நிமிட இடைவேளை இருக்கட்டும். நம் உடல் உறுப்புகள் உட்காருவதற்காகப் படைக்கப்பட்டவை அல்ல. அதனால் நீங்கள் நடுநடுவில் எழுந்து நின்று நடக்கணும்.
 
வயலில் வேலை செய்பவர்கள், காட்டில் சுற்றி அலைபவர்கள், மற்ற உயிரினங்கள் எல்லாமே கால்களை அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் நாம்?உட்காருவது ஆறு மணிக்கு அதிகமாக இருப்பது உங்கள் ஆயுளை 40 சதவிகிதம் குறைக்கிறது. இந்தப் பழக்கம் நீடிக்குமானால் 15 வருடத்திற்குள்ளாகவே நாம் நோயாளி ஆகிவிடுவோம். 
 
நீங்கள் உட்கார ஆரம்பித்தவுடனே, உங்கள் கால்களின் தசையின் வேலைகள் நிறுத்தப்படுகின்றன.கொழுப்பைக் கரைக்கிற 90 சதவிகிதம் செயலிழக்கிறது. உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு, இரண்டு மணி நேரம் முடிந்ததும் நல்ல கொலஸ்ட்ரால் 20% கிடைப்பதில்லை.
 
உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, மற்ற நிற்கிற வேலை பார்ப்பவர்களை விட 2 மடங்கு அதிகமாக இதய சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படும்.
 
சதா உட்கார்ந்தே இருந்தால் இன்சுலின் கொஞ்சம் கொஞ்சமாகச் சுரப்பது நின்று நீரிழிவு நோய்க்குப் பிள்ளையார் சுழி போட்டுவிடும். பிறகு என்ன? நிரந்தப் படுக்கைதான்!
 
மூன்று மணிக்கும் அதிகமாக டீ.வி. முன்பு உட்காருபவர்கள் தாங்களே 64%க்கும் அதிகமாக இதய நோயை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து மரணத்திற்கு அடியெடுத்து வைத்து விடுகிறார்களாம்.  
 
எனவே, எப்போதெல்லாம் முடியுமோ, அந்தச் சமயங்களில் உட்காருவதைத் தவிர்த்து, குனிந்து, நடந்து, குதித்து இளமையோட வாழுங்க!

1 comment: