Search This Blog

Monday, September 19, 2011

கணித மேதை;வானியல் வல்லுனர்!



இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள தில்லமல்ல என்ற ஊரில் கி.பி.598-ல் பிறந்தவர். ஆரியபட்டருக்குப் பின் தோன்றிய வானவியல், கணிதவியல் மேதை இவர். முதன்முதலில் கணிதம், அல்ஜீப்ரா என்ற இரண்டையும் வெவ்வேறு துறையாகப் பிரித்தவர். முதன்முதலாக பூஜ்யத்தைப் பயன்படுத்துவது பற்றி விளக்கியவர். இந்தியாவில் குறிப்பிட்டுக் கூறத்தக்க முதல் கணித மேதை இவரே. வியாக்ரமுகன் என்ற மன்னரின் அவையில் வானவியல் அறிஞராக விளங்கியவர். இவரது ‘பிரம்ம ஸ்புட சித்தாந்தம்’ என்ற நூல்தான் இன்றும் இந்தியாவிலும், அரபு நாட்டிலும் வானவியல் துறைக்கு அடிப்படை நூலாக விளங்குகிறது. ஈக்வேஷன்களுக்கு சுலபமாக விடை கண்டுபிடிக்கும் முறையை விளக்கியவர்.‘நியூமெரிகல் அனாலிசிஸ்’ என்ற உயர்நிலை கணிதத்தைக் கண்டு பிடித்தவரும் இவர்தான். வானவியல் தொடர்பான கணக்குப் போட, இவரது ‘கரான கண்ட கத்யாகம்’ எனும் நூலே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.



இவர் 668ல் மறைந்தார்.





யார் இவர்?


















விடை: பிரம்ம குப்தர்

2 comments:

  1. அரிய இதுவரை தெரியாத தகவல்
    பதிவிட்டமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete