Search This Blog

Monday, September 12, 2011

நாம் இந்தியர் என்று பெருமை கொள்ளும் வகையில் இந்தியாவின் சாதனைகள்:தாய் மண்ணே வணக்கம்!

படித்ததில் (பெருமையுடன்) ரசித்தது


* கணக்கிடுவதற்குத் தேவையான ‘பூஜ்ஜியத்தை’ கண்டுபிடித்தது ஆர்யபட்டர் என்ற இந்தியர்.

* கடந்த 10 ஆண்டுகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கவில்லை இந்தியா.

*கிறிஸ்துவுக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தட்ச சீலத்தில் உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 10,500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.

* கிறிஸ்துவுக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன், நாலந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்துக்கும் தாய்மொழியாக அமைந்தது இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர் ‘சாப்ட்வேர்’ தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான் என அமெரிக்கப் பத்திரிகையான ‘போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம்தான் மனித இனத்துக்கு ஆதியில் தெரிந்த மருத்துவமுறை. இந்தியாவின் சரகர் என்பவர்தான் இதை கண்டுபிடித்து முறைப்படுத்தினார்.


*கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை. குவாட்ராட்டிக் சமன்பாடுகள் ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால் 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* செஸ் விளையாட்டு இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தி ரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* கணித சாஸ்திரத்தில் ‘பை’ என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள் ‘பொத்தகோரஸ் தேற்றத்தை’ விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

* சூரியனை பூமி சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை ஐரோப்பியர்கள் கண்டு பிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார்.

* ‘நாவிகேஷன்’ - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் படகு செலுத்தும் கலையை 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே.

*கம்பியில்லா தகவல் தொடர்பை இந்தியாவின் ஜகதீஷ் போஸ்தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனம் அடித்துக் கூறுகிறது.

* சிசேரியன், கேடராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதர் என்ற இந்தியர். அறுவைச் சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருந்து சிகிச்சையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார். 



No comments:

Post a Comment