Search This Blog

Monday, January 31, 2011

சினிமா ... மினிமா


பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் விஷால் -சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கிறார்கள். பிப்ரவரி 14 சமீராரெட்டியின் பிறந்த நாள். அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது.


பிரபுதேவா அவரது மனைவிக்கு விவாகரத்துக்காக வழங்கியது ரூ 30 கோடி என்பது தெரிந்த விஷயம். அது என்னென்ன தெரியுமா? 2 இனோவா கார்கள்.அண்ணா நகரில் 3440 சதுரடி நிலம்.

கோயம்பேடு வீட்டுடன் 1000 சதுரடி நிலம். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீடு,ஆந்திர மாநிலம் கொண்டப்பூர் கிராமத்தில் உள்ள வீடு,மேலும் 10 லட்சம் ரொக்கம் என கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம்,நடனப் புயல்.


‘ஹிந்தி’யிலிருந்து அழைப்புவந்த வண்ணம் இருந்தபோது, ‘ஈசன்’ படத்தை முடித்த கையோடு போகலாம் என்று நினைத்தாராம் சசிகுமார். ஈசன் வரம் தரமறுத்ததால், மனம் உடைந்து போனதென்னவோ உண்மை. பெரிய தொகையைச் சுட்டு விட்டதாம். ‘பசங்க பாண்டியராஜ்’ மாதிரி வேறு ஒரு இயக்குனரின் இயக்கத்தில் படம் தயாரிக்கலாமா? என யோசித்து வருகிறார் சசிகுமார்.


இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். உடனே மகேந்திரனும் திரைக்கதை அமைத்தார். ஆனால், படம் நின்று போனது. அந்தப் படத்தில் கமலும் நடிக்க ஆசைப்பட்டார், இருவரின் ஆசையும் நிறைவேறவில்லை. இப்போது அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இயக்குபவர் மணிரத்னம். எம்.ஜி.ஆரும், கமலும் ஆசைப்பட்ட கதாபாத்திரம் ‘பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன்.’


இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில், பாக்யராஜ் - பூர்ணிமா நடித்துள்ளனர். இதயம் நிறுவனத் தயாரிப்பான மந்த்ரா கடலை எண்ணெய் விளம்பரத்தை ராஜ் டி.வி., கே டி.வி., ஒளிபரப்புகிறது. நல்லெண்ணெய் விளம்பரத்தை ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பகேட்டபோது அதன் நிறுவனம், பாக்யராஜ் மாற்று கட்சி என்பதால் மறுத்துவிட்டதாம்.


பொங்கல் ரிலீஸில் ‘சிறுத்தை’ வசூலில் செம கல்லா கட்டுகிறது. இப்படத்தை விஜய் டி.வி. 3 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. சிங்கமும், சிறுத்தையும் கோலிவுட்டில், சீற்றத்தோடு இருப்பதால் அப்பா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். சிறுத்தைக்கு கொங்கு மண்டலத்தில் பெண் ரெடியாகி விட்டதாம். இதுவும் விரைவில் அறிவிப்பு வரும்.


காமெடிப் புயலுக்கு ரொம்ப நாளாகவே தன் மகனை நாயகன் ஆக்க வேண்டும் என்று ஆசை. பிரபல இயக்குனர்களிடம் சொல்லிப் பார்த்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை.இப்போது ஒரு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார்.

ஆனால் தயாரிப்பாளர் போட்ட கண்டிஷனில் கொஞ்சம் கலங்கித்தான் போச்சாம் புயலு.

மகன் ஹீரோஆகவேண்டும் என்றால்,என் படத்தில் ‘கைப்புள்ளே’ நடிக்கவேண்டும். சம்பளத்தைப் பற்றிப் பேசக்கூடாது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியே வரும்.

No comments:

Post a Comment