Search This Blog

Tuesday, December 07, 2010

ரத்த சரித்திரம் II

நான் இந்த திரைப்படத்தை தமிழில் பார்க்க வில்லை.. முதல் பாகத்தில் ரவி தான் குடும்பத்தை அழித்தவர்களை பழி வங்கி அரசியலில் கால் பதித்து தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் போட்டு தள்ளி, தனி மனிதனாகவே அனந்த பூரில் வாழ்வதாக படம் முடியும்..

முதல் பாகத்தில் இருந்த நேர்த்தியான திரைக்கதையும், வசனம் மற்றும் அனைத்து நடிகர்களின் அற்புதமான நடிப்பால் எனக்கு இந்த இரண்டாம் பாகம் மேல் ஒரு வித எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்ய வில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாகத்தில் எந்த அளவுக்கு சிறப்பான திரை கதை இருந்ததோ, அந்த அளவிற்கு இதில் சறுக்கல்..

கதை :
பரிதல் ரவி ஒரு மீட்டிங் முடித்து திரும்புகையில் அவன் ஒரு வெடிகுண்டு விபத்தில் உயிர் தப்புகிறான். இவனை கொள்வதற்கு முயற்சி செய்கிறான் சூரி ( சூர்யா ).. ஏன் என்றால்  தான் குடும்பத்தை வெடி  குண்டு வைத்து  அழித்த ரவியை பழி வாங்குவதே இந்த ரத்த சரித்திரம் II..

ராம்கோபால் வ‌ர்மாவின் இய‌க்க‌த்தை ர‌சித்தேன்.. எடிட்டிங் மிக‌ ந‌ன்று. ஸ்லோமோஷ‌ன் காட்சிக‌ளையெல்லாம் நார்ம‌ல் ஸ்பீடில் காட்டியிருந்தால் ப‌ட‌த்தின் நீள‌ம் பாதியாய்க் குறைந்திருக்கும்!  கலர்புல்லாக படங்களைப் பார்த்துவிட்டு, இந்த டோனில் படம் பார்க்க எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் கொலைக் களத்துக்கே நம்மையும் கொண்டுசென்றிருக்கிறார்.

எனக்கு பிடித்தது :

கோர்ட்டுக்கு சூர்யாவை கொண்டு வரும் சீன் நன்றாக இருந்தது. கோர்ட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் மீதும், படம் பார்க்கும் நமக்கே சந்தேகம் வரும்படி அமைத்திருந்தார்கள்.

சூர்யா, பிரதாப்பை கொல்லும் காட்சி.
ரத்த சரித்திரத்தில் ஹீரோ, வில்லன் என்று எவருமே கிடையாது. அவரவர்களின் பார்வையில் அவரவர்கள் செய்வது நியாயமே.

No comments:

Post a Comment