Search This Blog

Wednesday, December 15, 2010

ஹேக்கிங்

கடந்த 1999-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்தது பழைய வரலாறு.
இப்போது, 2010-ல் இரு நாடுகளிலும் 'சைபர் வார்’ நடந்துகொண்டு இருக்கிறது மிக, ரகசியமாக... மிகப் பயங்கரமாக!

கத்தியின்றி, ரத்தமின்றி ஏ.ஸி. ரூமில் இருந்தபடியே, 'கம்ப்யூட்டர் கெரில்லா தாக்குதல்’ மேற்கொண்டு, இரு நாட்டு அரசாங்கங்களும் நூற்றுக் கணக்கான வெப்சைட்டுகளை மாறி மாறி வீழ்த்தும் போர்!

அந்தந்த நாட்டில் உள்ள கம்ப்யூட்டர் நிபுணர் களில் சிலர், தங்கள் கிரிமினல் மூளைகளை இந்த சைபர் யுத்தத்துக்குப் பயன்படுத்துகின்றனர். 'ஹேக் கர்ஸ்’ என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், 'இந்தியன் ஹேக்கர்ஸ், பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்’ என்று பிரிந்து நின்று, எதிரிகளாகச் செயல்படுகின்றனர். இந்தியன் சைபர் ஆர்மி (ஐ.சி.ஏ.), பாகிஸ்தான் சைபர் ஆர்மி (பி.சி.ஏ.) என்று இரண்டு பேனர்களில் இணைய தளங்களில் போர் முகங்களுடன் வலம்வரும் இவர்கள் அரங்கேற்றும் அதிரடிகள், திடுக்கிடவைப்பவை!

இன்டர்நெட் மூலமாக வைரஸ்களை அனுப்பு வது, உளவு பார்க்கும் இ-மெயில்களை அனுப்பி எதிரியின் வெப்-சைட்டை ஆக்கிரமித்து, அங்கு இருந்து தகவல்களைத் திருடுவது, தகவல்களை காப்பியடித்துத் தங்களை ஏவிவிடும் எஜமானருக்கு அனுப்புவது, நாட்டின் முக்கிய அரசுத் துறைகளின் வெப்-சைட்டுகளுக்குள் நுழைந்து புரோக்ராம்களைத் திருத்தி அவற்றை உருக்குலைப்பது, தவறான தகவல்களைச் சேர்ப்பது... இவை எல்லாம் இந்த 'ஹேக்கர்ஸ்’களின் வேலை!

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடக மாநில பிரபலத் தொழிலதிபரும், ராஜ்யசபா உறுப்பினருமான விஜய் மல்லையாவின் வெப்-சைட்டில் இருந்த மூவர்ணக் கொடியை அகற்றிவிட்டு, பாகிஸ்தான் நாட்டுக் கொடியை அந்த இடத்தில் பொருத்தி இருக் கிறார்கள். இது, இவர்களின் திருவிளையாடலுக்கு ஒரு சாம்பிள். உடனே இதைக் கவனித்து அதிர்ந்த மல்லையா, போலீஸில் புகார் கொடுத்தார்.  
நவம்பர் 26-ம் தேதி, மும்பைத் தாக்குதல் நடந்த நினைவு தினம். அன்று, பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டு உயிர் நீத்த இந்திய போலீஸாருக்கு பாகிஸ்தானியர் சல்யூட் அடிக்கும் வகையில் சில சில்மிஷ வேலைகளை நம்முடைய ஆட்கள் பார்த்தார்கள். பாகிஸ்தானின் 36 அரசாங்க வெப்-சைட்களில் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த டிசம்பர் 3-ம் தேதி, மிகவும் பாதுகாப்பு மிகுந்த சி.பி.ஐ-யின் அதிகாரபூர்வ வெப்-சைட்டின் முதல் பக்கத்தையே பாக்.நாட்டில் பி.சி.ஏ. ஹேக் செய்தது. அதில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்கிற கோஷம் வேறு இருந்தது.

'ஐ.சி.ஏ-வே! எங்களுடன் விளையாடாதே...’ என எச்சரித்து, '270 வெப்-சைட்டுகளை நாங்கள் ஹேக் செய்துள்ளோம்' என்றும் வாசகங்கள் மின்னின. இது டெல்லி உயர் அதிகாரி களை அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ-யின் வெப்-சைட் மூடப்பட்டது. டிசம்பர் 13-ம் தேதி வரை அதை மீண்டும் திறக்கவில்லை. மறுசீரமைக்க சைபர் க்ரைம் நிபுணர்கள் போராடுகின்றனர்.

விகடன் 

No comments:

Post a Comment