Search This Blog

Tuesday, December 14, 2010

சீட்டு

மிழர்களுடைய அடையாளமாக  ஐந்து விஷயங்களை வரிசைப்படுத்தினால் இட்லி- சட்னி- சாம்பாருக்கு அடுத்தபடியாக சீட்டு போடுவதுதான் இருக்கும்! அந்த அளவுக்கு சீட்டு என்பது தமிழர்களின் சேமிப்புக் குணங்களில் ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்துவிட்டது... நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு, ஏலச் சீட்டு என ஏதாவது ஒருவகையில் சீட்டு சேரும் பழக்கம் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் புகுந்திருக்கிறது.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் சீட்டை வைத்துதான் தங்களது பண நெருக்கடிகளைச் சமாளித்து வருகிறார்கள். இருந்தாலும், அது இரண்டுபக்கமும் கூர்மையான வாளைப் போன்ற ஒன்றுதான். சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பதம் பார்த்துவிடும். சீட்டில் சேர்பவர்களை மட்டுமல்ல; சீட்டு நடத்துபவர்களையேகூட சில சமயங்களில் சரித்துவிடும்!
சீட்டுகளில் பலவகை இருந்தாலும் அதிக ரிஸ்க் இல்லாத சீட்டு என்றால் அது நகை சீட்டுதான். இந்த சீட்டு நகைக் கடைகளில் மட்டுமே போடப்படுவதால் பெரும்பாலும் எந்தவித மோசடியிலும் சிக்காமல் நகையாகக் கிடைத்துவிடும்.

ஆனால் மற்றவகை சீட்டு களை நம்மால் அப்படிச் சொல்ல முடிவதில்லை. ஆசையாக சீட்டு போட்ட இடத்தில் வேட்டு வைத்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. காலை பேப்பரைத் திறந்தால், 'சீட்டு நடத்தியவர்கள் பல லட்சம் ரூபாயுடன் ஓட்டம், சீட்டு நடத்திய பெண் தலைமறைவு’ என பலவிதமான மோசடிச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

சீட்டை விட்டால் வேறுவழி இல்லை, அதேசமயம் அது வேட்டு வைப்பதாகவும் இருந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் இனி கவனமாகப்  படியுங்கள்...

தனிநபர் சீட்டை தேடியோடும் மக்கள்!
அங்கீகரிக்கப்பட்டு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் நிறுவனங்களை விட தனிநபர்கள் நடத்தும் சீட்டுகள் தான் பெரும்பாலும் மக்களை ஈர்க்கிறது.  தாங்கள் குடியிருக்கும் பகுதி, வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றில் தினம் தினம் பார்த்துப் பழக்கப்பட்ட நபர்களிடமே சீட்டு போட முன்னுரிமை கொடுக்கிறார்கள். சீட்டைப் பொறுத்தவரை பரஸ்பர நம்பிக்கைதான் அதன் மூலதனம். சீட்டு போடுபவர், நடத்துபவர் என்று இரு தரப்பும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பணத்தைப் பரிமாறி கொள்கின்றனர்.
அலையவிடும் கடன் கொடுக்கும் நிறுவனங்கள்
சீட்டு நிறுவனங்களை விட தனிநபர்களை மக்கள் நாடுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் சீட்டு சேர்வதற்கும், பணத்தை வாங்குவதற்கும் எந்தவிதமான ஆவணங் களையும் கேட்கமாட்டார்கள் என்பதுதான்!






No comments:

Post a Comment