Search This Blog

Tuesday, October 26, 2010

எந்திரன் உன் அல்டிமேட் படமா..? இல்லை.. -- உண்மையை சொல்கிறார் ரஜினி

டைரக்டர்கள் யூனியன் சார்பாக நடந்த விழாவில் ரஜினியை கே.பாலசந்தர் பேட்டி எடுத்ததுதான் ஹைலைட். வேதனை என்னவென்றால் இந்த பேட்டி எடுக்கப்படும் போது இரவு பதினொரு மணியை தாண்டியிருந்தது. பலரும் வீட்டுக்கு கிளம்பியிருந்தார்கள். விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றாலும், அதற்கு முன் இந்த கேள்வியும் பதிலும் உலகம் முழுக்க பரவிவிட்டதுதான் ஆச்சர்யம். 

திரும்பவும் சிவாஜிராவாக மாற முடியுமா உன்னால்..?
இப்பவே அப்படித்தான் இருக்கேன்..

புகழ் உச்சிக்குப் போனாலும் இதனால உன்னோட பிரைவசி போயிருச்சேன்னு உனக்கு வருத்தம் உண்டா..?
இருக்கு.

உன்னோட புகழால பிரைவஸியைவிட வேற எதையாவது இழந்துட்டியா..?
இப்ப சூழ்நிலைக் கைதி மாதிரிதான் இருக்கேன்.

உன்னோட வாழ்க்கைக் கதையை நீயே எழுதுவியா..?
ஆட்டோ பயோகிராபின்னா நிச்சயம் நிறைய உண்மைகளை எழுதணும்.. வேணும்ணா உங்ககிட்ட சொல்லி எழுதுவேன்..

உண்மையை எழுதறதால உனக்கு பயமா இருக்கா..?
ஜாஸ்தியா இருக்கு..

உன்னை இந்த அளவுக்குப் புகழ் உச்சில கொண்டு போய் வைச்சிருக்கிற இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு நீ என்ன செய்யப் போற..?
பெருமைப்படற அளவுக்கு அவங்களுக்கு ஏதாவது செய்யணும். நிச்சயம் செய்வேன்.

நிறைய சினிமாக்களைப் பார்க்கும்போது இதை நாம பண்ணியிருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைச்சிருப்பியே.. அது மாதிரியான படங்கள் எது..?
நிறைய படங்கள்.. பெயர் வேண்டாமே..

நீ ஒன் மேன் ஆர்மி மாதிரி. நீயே ஒரு படம் டைரக்ட் செஞ்சா என்ன..?
அது ஒரு பெரிய பொறுப்பு. என்னால செய்ய முடியுமான்னு தெரியலை.. யோசிக்கணும்.. இப்போதைக்கு முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.

ஒருவேளை அப்படி நீ படம் எடுத்தா என்னை அஸிஸ்டெண்ட்டா சேர்த்துக்குவியா..?
சிரிப்பு

நீ இதுவரைக்கும் மொத்தமா எத்தனை படத்துல நடிச்சிருக்க..?
௧௫௪

50 வருஷம் கழிச்சு உன்னோட படத்துல எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம்னு நினைக்கிற..?
ராகவேந்திரா.. பாட்சா, எந்திரன்..

இதுல என் படத்தை ஏன் சொல்ல மாட்டேன்ற..?
சிரிப்பு..

அமிதாப்பச்சன் செஞ்ச 'சீனி கம்' மாதிரி கதையம்சம் உள்ள படத்துல நடிப்பியா..?
அது மாதிரி நமக்கு செட்டாகாது. கமலுக்குத்தான்..

தேசிய விருது வாங்கலையேன்னு உனக்கு இப்பவும் வருத்தம் இருக்கா? இல்லியா..?
இருக்கு.. அது மாதிரி நல்ல கதையோட டைரக்டர்ஸ் அமையலை.. இனிமே நீங்க பண்ணினாத்தான்..

நான் உன்னை வைச்சு இனிமே படமே பண்ண முடியாதுப்பா. நீ எங்கயோ போயிட்ட.. சரி அதை விடு. என்னோட நாடகத்துல நடிப்பியா..?
கண்டிப்பா..
என்னோட மேஜர் சந்திரகாந்த் நாடகத்தைத் திருப்பிப் போடப் போறேன். ஏப்ரல்-15 வைச்சுக்கலாமா? ரெண்டு நாள் மட்டும் டேட் கொடு. போதும்..
சரி..

கமல் என்னை நடிக்க வைச்சு டைரக்ட் பண்றேன்னு சொல்றாரு. ஆனா நீ ஏன் அது மாதிரி சொல்ல மாட்டேன்ற..?
செஞ்சா சொல்றேன்..

ரஜினிகாந்த்ன்னு உனக்கு என்னிக்கு பேர் வைச்சேன்னு ஞாபகம் இருக்கா..?
ஹோலிப் பண்டிகை அன்னிக்கு..
அப்போவெல்லாம் ஒவ்வொரு வருஷமும் ஹோலிப் பண்டிகைக்கும் இந்தப் பேர் வைச்சதை ஞாபகம் வைச்சிருந்து என்னைப் பார்க்க வருவ.. கொஞ்ச வருஷம் வந்துக்கிட்டிருந்த.. அப்புறம் வர்றதில்லை.. மறந்துட்டியேப்பா..
இனிமேல் நடக்காது. கண்டிப்பா வருவேன்.

ஆனா, எனக்கு ஹோலிப் பண்டிகைன்னாலே உன் ஞாபகம்தான் வரும்.. ஓகே..
என் படத்துல நடிக்கும்போது ஏண்டா, இவன்கிட்ட மாட்டிக்கிட்டோம்ன்னு என்னிக்காவது நினைச்சிருக்கியா..?
நிறைய தடவை..

நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணினதே 5 படம்தான் இருக்கும். அதுக்குள்ளயே நிறைய தடவை யோசிச்சுட்டியா..?
சிரிப்பு
உனக்கு ஞாபகம் இருக்கா.. 'தில்லுமுல்லு' படத்துல நடிக்க உன்னைக் கூப்பிட்டப்போ “உன்னால காமெடி செய்ய முடியும். தைரியமா செய்”யுன்னு நான்தான் அழுத்தி, அழுத்திச் சொன்னேன்.
ஆமாமாம்..

நீதான் ரொம்ப பயந்த.. ஏன்னா மீசையை எடுக்கணுமேன்னு..!?
சிரிப்பு

'அவர்கள்' ஷூட்டிங் சமயத்துல உன்னை கண்டபடி திட்டிட்டேன். கோச்சுக்கிட்டு வெளில போயிட்டேன். நீ மறக்கலியே..?
இல்லை..

பஸ் கண்டக்டரா இருக்கும்போது யாரையாவது லவ் பண்ணியிருக்கியா..?
அப்புறமா சொல்றேன்..

எந்திரன் உன் அல்டிமேட் படமா..?
இல்லை..

நான் எந்திரன் படத்தை 2 தடவை பார்த்தேன். உனக்காகத்தான்.. நீ என் படத்தை என்னிக்காச்சும் 2 தடவை பார்த்திருக்கியா..?
நிறைய பார்த்திருக்கேன்.. 

எந்திரன் படத்தை முடிச்சிட்ட..? மகளுக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சிட்ட.. இப்ப உன்னோட அடுத்தக் கவலை என்ன..?
எதைப் பத்தியும் நினைக்கலை..

இப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்குற..?
இந்தக் கேள்வி பதில் எப்போ முடியும்..?

உனக்குப் புடிச்ச சூப்பர் ஸ்டார்.. எந்தத் துறையில வேண்டுமானாலும் இருக்கலாம்..
சிங்கப்பூர் முன்னாள் பிரைம் மினிஸ்டர் லீ க்வான் யூ..

கவிதை எழுத ஆசை இருக்கா உனக்கு?
இருக்கு.

அதற்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா..?
இல்லை.

இவர் போல் இல்லையேன்னு நீ யாரையாவது பார்த்து நினைச்சிருக்கியா..?
நிறைய பேர்..

வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டிருக்கியா?
இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப்பட்டிருக்கிறேன்.

உனக்குச் சின்னச் சின்ன ஆசைகள் உண்டா..?
உண்டு..

இப்பவும் சிகரெட் பிடிப்பியா..?
நிறைய..

விடுறா.. நீ விட்டீன்னா நாட்ல நிறைய பேர் விட்ருவாங்க. உனக்கே தெரியும் நான் பாக்கெட், பாக்கெட்டா எத்தனை ஊதியிருக்கேன்னு. நானும் ஒரு நாள் விட்டேன். நீயும் விட்ரு என்ன..?
ட்ரை பண்றேன்..

உனக்குப் பிடித்த தமிழ் இயக்குநர் யார்?
மகேந்திரன்..

உனக்குப் பிடித்த புத்தகம் எது?
பொன்னியின் செல்வன்..

குடும்பத்தோடு நீ சென்று வந்த பிக்னிக் ஸ்பாட்..?
லண்டன்..

நீ மட்டும் தனியா போயிட்டு வந்த இடம்.. இமயமலையைத் தவிர..?
நேபாளம்..
அதுவே கிட்டத்தட்ட இமயமலைதான்.. சரி விடு.. 

உனக்குப் பிடித்த உணவு எது?
சிக்கன்.
யார்கிட்ட சொல்றான் பாருங்க. என்கிட்ட.. ஏதாவது வெஜ் அயிட்டம் சொன்னீன்னா நான் அதை பாலோ பண்ணலாம்னு நினைச்சேன்.. 

உன்னோட பெஸ்ட் பிரெண்டு யாரு..?
ராவ்பகதூர்..

ஏற்கெனவே சொல்லியிருக்க.. சரி.. உன்னோட பேவரிட்டான வண்டி..
ஜாவா மோட்டார் பைக்..

நீ இப்பவும் நினைச்சுப் பார்த்து சந்தோஷப்படுற நாள்..?
கே.பி. ஸார் என்னை அவர் படத்துல புக் செஞ்ச நாள்..

நீ இப்பவும் நினைச்சு துக்கப்படுற நாள்..?
எங்கப்பா செத்த நாள்..

நீ மறக்காம வைச்சிருக்கிறது..?
முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர்..

உன்னை ரொம்ப அவமதிப்பு செஞ்ச விஷயம்..?
வேண்டாமே..

உன்கிட்டயே உனக்குப் பிடிக்காதது..?
என்கிட்ட எனக்குப் பிடிக்காதது எது..?(யோசனை)

என்கிட்ட உனக்குப் பிடிக்காதது எது..?
உங்க கோபம்..

சரி.. என்கிட்ட மட்டுமாச்சும் ரகசியமா சொல்லு.. அரசியலுக்கு நீ வருவியா? மாட்டியா..?
மேலே கைகளைத் தூக்கிக் காண்பித்தார்.

இப்ப நீ ஏதாவது சொல்றதா இருந்தா சொல்லிக்க..!
நோ கமெண்ட்ஸ்..


No comments:

Post a Comment