Search This Blog

Tuesday, August 31, 2010

காமன்வெல்த், இந்தியா, பாகிஸ்தான் , பார்லிமென்ட், மதுரை - ஆதங்கம்

காமன்வெல்த்
  ************************************************************************************
இதோ அனைவரும் எதிர்பார்த்த ரஹ்மானின் காமன்வெல்த் பாடல் வெளியாகிவிட்டது.. அதனுடன் சேர்ந்து பாடலை குறித்து சர்ச்சையும் சேர்ந்து வந்து உள்ளது. நம் நாட்டின் மந்த்ரிகள் , விழா குழு நபர்கள் அனைவருக்கும் அந்த பாடல் பிடிக்க வில்லை.. இந்த பாடலில்  குறை  ஒன்றும் பெரிதாக தெரியவில்லை .. நான் ஒன்னு கேட்கிறேன், மற்ற பாடல்கள் உடன் இதனை ஒப்பிட்டு பார்த்து பிடிக்க வில்லை என சொல்லகிறோம்.. ஏன், நம்ம தேசத்தை வளர்ந்த நாடுகளுடன், அடிப்படை வசதிகளை ஒப்பிட்டு யாரும் பார்பதில்லை. போட்டி காண மைதானம் தயார் இல்லை, பேச வந்துட்டாங்க .. போயி தண்ணிய குடிங்க சார்..

************************************************************************************
மிக பெரிய போட்டியை நடத்தும் வாய்ப்பு நம் தேசத்திற்கு கிடைத்திருக்கு.. ஆனால், இதில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு ஊழல். நம் பிரதமர் அவர்கள், இதனை நேரடிய போயி ஆய்வு செய்துள்ளார். சார், இதை நீங்க எட்டு மாதத்திற்கு முன்பு செய்து இருந்தால் இந்த அளவுக்கு சர்ச்சை இருந்து இருக்காது. தன் சக மந்திரி ஊழல் செய்துள்ளார். அதுவும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால், அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அப்போ, இந்த அரசு கையாலகாத அரசுதானே! ( என்னை பொறுத்த வரை )
**************************************************************************************

மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்கையில் இந்தியாவை தான் வயசான ஆட்கள் ஆண்டு உள்ளனர்.. தயவு செய்து ஒரு 35 வயது நபரிடம் ஆட்சியை ஒப்படைத்து ( வாய்ப்பு குடுத்து ) முயற்சி செய்து பாருங்கள்.. தமிழ் முதல்வன் படம் போல அல்லது தெலுகு லீடர் படம் போல எந்த மாற்றங்களும் நிகழாத என ஏங்கும் சக தோழன் நான்.

****************************************************************************************


மீண்டும் ஒரு கிரிக்கெட் ஊழல். அதுவும்  கிரிக்கெட் ஊழல்க்கு  பெயர் பெற்ற பாக்கிஸ்தான் மீது. எனக்கு எதுவுமே புரியலை. பணம் கொடுத்த நாட்டை காட்டி கொடுபாரோ.. தேச பற்று இல்லாமல் போய்விட்டதோ..  ஒழுங்காக பணம் கொடுத்தால் அவர்கள் ஏன் தர குறைவாக, மிக மட்டற்ற செயல்களை செய்ய போகிறார்கள்.. இது மாத்ரி ஆட்களின் தவறு நிரூபணம் ஆகும் போது  ஆயுள் தடை( விளையாட ) மற்றும் பாஸ்போர்ட் முடக்கம் செய்ய வேண்டும்.. செய்வார்களா..

***********************************************************************************
 
நம் நாட்டின் மந்த்ரிகளின் சம்பளம் உயர்ந்து விட்டது. சந்தோஷமான விஷயம்.. ஆனால், பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கு எதற்கு சம்பளம். அது போக, சபை நடக்காமல் போனால் அதற்க்கு எதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.. என்ன சார், அரசு பொது துறையில் வேலை செய்பவர்களுக்கு தனி சட்டம், மற்றவர்களுக்கு தனி சட்டமா?

*******************************************************************************************
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக இந்தியா 25 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்ய போகிறது. செய்ய வேண்டியது தான்.. உதவி செய்வது தேவை தான். ஆனால் இங்கேயே உண்ண உணவு, இருக்க இடம் இல்லாமல் எத்தனை மனிதர்கள் இருக்கிறோம்.. அவர்களை பற்றியும் சிந்தனை செய்யுங்கள்..

****************************************************************************************
எந்திரன் பிசினஸ் கிட்டதட்ட 250 கோடியை தாண்டும் என்கிறார்கள்..மதுரை ஏரியாவை சுமார் 13 கோடி! கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்ய போகிறார்கள். இந்த அளவுக்கு பணம் எப்படி வந்தது. யாராவது கேட்டு சொன்னால் நல்லா இருக்கும்.

****************************************************************************************
ப்ரியமுடன் 
ராஜா 

No comments:

Post a Comment