Search This Blog

Saturday, August 21, 2010

பாணா காத்தாடி - என் விமர்சனம்

முரளியின் பையன் அதர்வா அறிமுகம் ஆகி உள்ள திரைப்படம். விண்ணை தாண்டி வருவாயில் அறிமுகமான சமந்தா நடித்த படம். அறிமுக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள படம்.

கதை :

வட சென்னையில் உள்ள அதர்வா மற்றும் பேஷன் டெக்னாலஜி படிக்கும் சமந்தாக்கும் எவ்வாறு காதல் அரும்புகிறது.. அதனல் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதே  பாணா காத்தாடி..

கொஞ்சம் விரிவாக சொல்லுகிறேன் :


தர்வா காத்தாடி(பட்டம்) விடுவதே தன் வாழ்வில் பெரும்பகுதியாக வைத்து கொண்டு ஊர் சுற்றும் ஒரு கல்லூரி பையன். அவனுக்கு ஊறு துணையாக ( நண்பர்களாக ) கருணாஸ் அன் கோ.. நாயகன் தான் காத்தாடி பிடிக்க போகையில் எதிர்பாராமல் நாயகின் மேல் இடித்து அவளுடைய பென் டிரைவ் ( கடைசி வருட ப்ராஜெக்ட் உள்ளது ) தெரியாமல் நாயகனிடம் வந்து விடுகிறது. இதனால், ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சில நாட்கள்  கழித்து சமாதனம், அதன் மூலம் இருவருக்கும் காதல் பிறக்கிறது. கொஞ்ச நாட்கள் கழித்து இருவருக்குள் பிரச்சனை ஆரம்பம். இந்த சமயத்தில் ஒரு கொலையை நாயகன் நேரில் பார்ப்பதால், அவனை கொல்ல துடிக்கும்  வில்லன். பின்பு இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

அதர்வா :

சென்னை பாஷை பேசுவதற்கு ரொம்ப சிரம படுகிறார். மத்தபடி நடிப்பு ஓர் அளவுக்கு ஓகே..

சமந்தா
:

செம அழகு.. சிரிக்கும் போதும் அல்லும் போதும் நன்றாக நடித்துள்ளார். ஆனால் எனக்கு காதல் கொண்டேன்ல சோனியாவை பார்த்த மாதரி இருக்கு.. சோகத்திலும் அழகான முகம்

பிரசன்னா:
அஞ்சாதே படத்துக்கு அப்புறம் நிறைவான நடிப்பு . டைசியில் அதர்வாவை காப்பாற்ற அவனுக்கு கத்தியை கொடுக்கும் போதும், கண்களாலேயே நடித்து இருக்கிறார்.

கருணாஸ்:

மனுஷன் முன் பாதியில படத்தை கொண்டு செல்வதே இவர் தான்.. அதுவும் அந்த போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அப்பா பாக்கெட்ல பணம் எடுக்குற ஜோக் நன்ற உள்ளது.. கடைசியில் உருக்கமாக அப்பாவிடம் பேசும்  இடம் மிக நல்லா இருக்கு..

யுவன் :

இந்த படத்தை பார்க்க வைத்தே யுவனின் இசை தான். மூன்று பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.. பின்னணி இசை ஓகே ரகம்.

மௌனிகா:

ரொம்ப நாளைக்கு அப்புறம் நடிசிருகாங்க, அவுங்கள பத்தி அவ்ளோவ சொல்ல தேவை இல்ல.. ஆனால், கொஞ்சம் ஓவர் அக்டிங் போல இருக்குது..


படத்தில் எனக்கு பிடித்த வசனம் :

  • "நல்லவங்களுக்குத்தான் அழுகை வரும்"
  • 'சில சமயம்,நமக்கு தேவைப்படுறது நமக்கு கிடைக்காது;ஆனால் நமக்கு கிடைச்சது நமக்கு தேவைப்பட்டதை விட நல்லாவே இருக்கும்'
  • 'என்னைப் பெத்தவங்களும் சரி,என்னைக் கட்டினவரும் சரி, என் பையன் அளவுக்கு என்னை சந்தோஷப்ப்டுத்தினதில்லை'

நாயகி தான் பக்கம் உள்ள நியாயத்தை விளக்க எடுக்கும் குறும் படம்.. cute

முரளி வரும் இடம், மற்றும் அந்த வசனம் அருமை ( மறந்துடுச்சு )!!!!!!


படம் வெற்றி படம் இல்லை என்றாலும், இந்த ஆண்டில் வந்த மற்றுமொரு நல்ல படம் இது


No comments:

Post a Comment