Search This Blog

Thursday, August 12, 2010

பிறந்தநாள்..




இன்று என்னுடைய பிறந்தநாள்.. வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவர்க்கும் என் நன்றிகள்.

கடைசியாக முன்று வருடங்கள் நான் கொண்டாடியதை இல்லை. ஒவ்வரு நாள் என்னுடைய பிறந்தநாள் வரும் பொது எனக்கு ஏன்பிறந்தாய் மகனே பாடல் தான் நினைவுக்கு வருகிறது. என்கிட்ட  என்ன பிரச்சனைனா இது வர பெருசா எந்த ஆணியும் புடுங்கவில்லை. அதான் முக்கிய காரணம். இனிமேலும், எதுவும் செய்வேன் என தோன்றவில்லை. ஆனால் வயது அதிகம் ஆக ஆக பொறுப்புகள் அதிகம் ஆகிறது. பொறுப்புகள் அதிகம் ஆகும் பொது வாழ்க்கையின் மேல் வெறுப்பு, கோபம் வருகிறது. யாரிடமும் பேசாமல் இருந்தால் அந்த பயம் + கோபம் ஏற்படுவதில்லை . மனம் அமைதி ஆகிறது.

நான் என்னுடைய டிப்ளோமா படிப்பு படிக்கும் பொது என்னுடைய வகுப்பு ஆசிரியர் திரு. ஜெயவேல் அவர்கள் அடிக்கடி ஒரு திருக்குறளை  சொல்லி எல்லோரையும் திட்டுவார். அதனை ஒரு பிடிப்பாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்த உதவிகளை கைமாறு கருதாமல் செய்து கொண்டு இருக்கிறேன். அந்த குரல்

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று"


இதை என்
நண்பர்களிடம்  சொல்லும் பொது சில நபர்கள் , `தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற குறள் நடைமுறைக்கு ஒத்துவராததாகத் தெரிகிறதே! புகழோடு பிறப்பதற்கு நாம் என்ன அமைச்சர் , இல்லை நடிகர்களின் மக்களா, அல்லது அதிசய பிறவிகளா? பிறக்கும்போதே ஒருவர் எப்படிப் புகழோடு பிறக்கமுடியும்?" மடமடவென்று வினாக்களைத் தொடுத்த நண்பர், நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என் முகத்தையே பார்த்தார்.

நண்பர் அவருக்கு தோன்றிய கருத்தை சொல்லிவிட்டார். ஆனால், இதில் தோன்றுதல் என்றால் பிறத்தல் என்ற பொருள் மட்டுமன்று, உள்ளத்தில் தோன்றுதல் என்ற பொருளும் உண்டென்பது தெரிகிறது அல்லவா? உதற்னமாக காந்தி அல்லது அன்னை தெரசா முனகல் மனதில் நினைத்து கொள்ளுங்கள்.. அவர்களை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" "அவர்களின் செயற்கருஞ் செயல்கள்"  .

"அதாவது, அவர்களின் புகழ் உங்களுக்குத் தோன்றுகிறது. நல்லது; (Hitlor), கோட்சே போன்றோரை நினைத்தவுடன்" "அதாவது, அவர்களைப் பற்றிய இகழ் உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறது. இப்படிப் புகழும் இல்லாமல் இகழும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?"" அவர்கள்தாமே உலகத்தில் பெரும்பான்மையினர்."
 
இந்த மூன்று வகையான மக்களைப் பற்றித்தாம் திருவள்ளுவர் இக் குறளில் குறிப்பிட்டிருக்கிறார்." "எப்படி?" 

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் இகழோடு தோன்றுவதைக் காட்டிலும் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து தான் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்துபோகும் மக்களைப் போல ஒன்றுமே தோன்றாதிருப்பது நன்று. இப்போது சொல்லுங்கள்.. இந்தக் குறள் நடைமுறைக்கு ஒத்ததுதானே.."

நான் கடவுள் இடம் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்று.. எனக்கு இந்த பிறவியே கடைசியாக இருக்க வேண்டும்.. மனிதனாய் பிறப்பது விட உயிர் அற்ற ஜடாம இருக்குறதே மேல்!

எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் 



3 comments:

  1. நல்ல பதிவு நண்பா.!! வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete
  2. அன்பின் மழைக் காகிதம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete