Search This Blog

Friday, December 31, 2010

பிகாரில் வந்த துணிச்சல் ஏன் தமிழகத்திலும் வரக்கூடாது? - ராகுல் காந்தி

காங்கிரஸில் இளைஞர் சக்தியை அதிகரித்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை  ஏற்படுத்த முடியும்''- அண்மையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அக்  கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி, தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும்  திரும்பத் திரும்ப வலியுறுத்திய கருத்து இது. ""காமராஜ் ஆட்சியை அமைத்தே  தீருவோம்''- உள்ளூர் தலைவர்கள் அடிக்கடி கூறும் சூளுரை இது. 

 125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சி, மத்தியில் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சிப்  பொறுப்பில் உள்ள கட்சி என காங்கிரஸ்காரர்கள் பெருமை பேசிக் கொண்டாலும்,  தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸôல் ஆட்சிப் பொறுப்புக்கு வர  முடியவில்லை. காங்கிரஸ் இல்லாத கூட்டணி ஜெயிக்காது என்று கூறும் அதே வேளையில், கூட்டணியில் இல்லாத காங்கிரஸôலும் ஜெயிக்க முடியாது என்பதே நிதர்சனம்.

 உள்கட்சி ஜனநாயகம் இல்லாதது, ஏதோ ஓர் அத்திப்பட்டிக்கு நிர்வாகி என்றாலும்  தில்லியில் நியமனம் செய்யப்படுவது, கோஷ்டி அரசியல், தலைமையை மதிக்காதது,  கோஷ்டித் தலைவர்களின் மாறுபடும் விசுவாசம், மக்கள் பிரச்னைக்காக களம் இறங்காதது என காங்கிரஸின் தேய்மானத்துக்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைதான் கட்சிக்குள்.  கட்சியை எப்படி வளர்ப்பது என்று "கழகங்களிடம்' பாடம் படிக்க வேண்டிய  நிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. மாநிலத் தலைவரே ஆனாலும் அவருக்கு எதிராக  பூந்தொட்டியை வீசுவது, முற்றுகையிட்டு கோஷ்டி வலுவைக் காட்டுவது எல்லாம்  காங்கிரஸில் மட்டும்தான் நடக்க முடியும். மற்ற கட்சிகளில், குறிப்பாக, மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வரும் "கழகங்களில்' தலைமைக்கு எதிராகத் தொண்டர்களால் மூச்சுவிட முடியுமா? 

காங்கிரஸில் தொண்டர்களைவிட தலைவர்களே அதிகம் என வேடிக்கையாகச்  சொல்வதுண்டு. அந்த அளவுக்குக் கட்சியினரைத் திருப்திப்படுத்த வேண்டும்  என்பதற்காகவே பதவிகள் பங்கிடப்பட்டுள்ளன. மாவட்டச் செயலாளர் பதவியே  கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என திசைக்கு ஒன்றாக இருக்கிறது. இதுபோக  வட்டம், நகரம், பேரூர், ஊராட்சி என பதவிகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை, வாசன் அணி, தங்கபாலு அணி, சிதம்பரம் அணி, இளங்கோவன் அணி என நான்கு அணிகள் செயல்படுகின்றன. 50 உறுப்பினர்களைக்  கொண்ட சின்னஞ்சிறிய ஊர்களில்கூட இந்த நான்கு அணிகளும் செயல்படுகின்றன. எந்த அணிக்கு எவ்வளவு செல்வாக்கு என்று கணக்குப் பார்த்து, அதன் விகிதாசார அடிப்படையில்தான் கட்சிப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. பதவி வாங்கிக்  கொடுக்க அணித் தலைவர் இருக்கும்போது, கட்சியைவிட அந்த அணித் தலைவருக்கே தொண்டர்கள் விசுவாசம் காட்டுகின்றனர். ஓர் ஊரில் காங்கிரஸ்காரர்கள் விழா நடத்துகிறார்கள் என்றால், அது எந்த அணியின் விழா என்றுதான் கேட்க வேண்டியுள்ளது. இது போதாது என்று, ஒரே கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சியினர் போல மாறிமாறி அறிக்கைப் போர்விட்டு, பேட்டியளித்து அவ்வப்போது "ஒற்றுமையை' வேறு பறைசாற்றிக் கொள்கின்றனர். பின்னர் எப்படிக் கட்சி வலுப்பெறும்?

கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று உண்மையிலேயே எண்ணம் இருந்தால், தமிழகக் காங்கிரஸின் இப்போதைய தேவை என்ன தெரியுமா? அணிசேரா  கொள்கைதான்.  தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸýக்கு மொத்தம் 14 லட்சம் உறுப்பினர்கள்  இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு கட்சியும், ஜாதி அமைப்புகளும் காட்டும் இந்தக் கணக்கு எத்தனை உண்மை என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலத்தான் இதுவும்.

எல்லா தேர்தலிலும் ஏதாவது ஒரு கட்சியின் தோளில் ஏறி அல்லது ஒரு கட்சியைத் தோளில் ஏற்றித்தான் தேர்தலைச் சந்தித்திருக்கிறது காங்கிரஸ். அந்த அணி வெற்றிபெற்று ஆட்சிக்கும் வந்துவிடுவதால், பின்னர் அரசுக்கு எதிராக மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்திக்கூட  எந்தப் போராட்டத்தையும் காங்கிரஸ் நடத்துவதில்லை. கூட்டணி தர்மமாம். உள்ளூர்  பிரச்னைகளைத் தவிர்த்து மாநில அளவிலான மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்காக  காங்கிரஸ் எந்தப் போராட்டத்தையாவது நடத்தியிருக்கிறதா?

கட்சியின் உண்மையான பலத்தை அறிவதற்காக பிகார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெறும் நான்கு இடங்களிலேயே வென்றபோது, "கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டியுள்ளது'' என்று சொன்னார்கள் சோனியாவும் ராகுலும். 

 நாங்கள் சேரும் அணிதான் வெற்றி என்ற வெற்று மாயையைவிட உண்மையான  பலத்தை அறிந்துகொண்டால் கட்சியை வளர்க்கவாவது ஆர்வம் தோன்றும். பிகாரில்  வந்த துணிச்சல் ஏன் தமிழகத்திலும் வரக்கூடாது? 

ராஜாராம் 

Thursday, December 30, 2010

2010ன் நாயகன் விருதும் காமெடியன் விருதும் - ஞானி

கடந்து முடியும் 2010ம் ஆண்டில் உலகத்தையே கலக்கிய,கலக்கிக் கொண்டிருக்கிற ஒரே மனிதர் என்றால் அது ஜூலியன் அசாஞ்சேதான். எனவே அவருக்கே 2010 நாயகன் விருது.

ஜூலியன் யார் ? அரசாங்கங்களின் அராஜகங்களை அம்பலமாக்கத் துடிக்கும் ஒவ்வொரு சமூகப் போராளிக்கும் 39 வயதாகும் ஜூலியன் ஒரு ரோல் மாடல். அவர் 2006ல் தொடங்கிய விக்கிலீக்ஸ் இணையதளம் நான்காண்டுகளாக அம்பலப்படுத்திவரும் உலக அரசு ரகசியங்கள் எல்லா நாட்டு அரசாங்கங்களையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றன.

மக்களுக்கு நியாயமான விஷயங்கள் நடக்க வேண்டுமானால், ஜனநாயகம் தழைக்க வேண்டும். அதற்கான அடிப்படைத் தேவை ஒளிவு மறைவற்ற பகிரங்கமான நிர்வாகம். அதை செய்யத் தவறும் அரசுகள்தான் ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் எதிரிகள். எனவே அவற்றை அம்பலப்படுத்த வேண்டும். சுருக்கமாக இதுதான் ஜூலியனின் கொள்கை.

ஜூலியன் முதன்மை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் விக்கிலீக்ஸ் இதுவரை அம்பலப்படுத்திய விஷயங்கள் பல. சோமாலியாவில் ஒரு லோக்கல் தலைவர் ஆள் தூக்கி வேலைகளுக்காக அடியாட்களை அனுப்பக் கேட்டு எழுதிய கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. கென்யாவில் நடக்கும் அரசு ஊழல்கள் அடுத்த லீக்.ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளின் முக்கிய வங்கிகளில் நடந்த ஊழல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

நெதர்லாந்திலிருந்து டிரஃபிகுரா என்ற கம்பெனி விஷக் கழிவுகளைக் கப்பலில் ஏற்றி எந்த நாடும் அதை அனுமதிக்காத நிலையில் ஆப்பிரிக்க நாடான ஐவரியில் அபிட்ஜான் துறைமுகத்தில் கொண்டு இறக்கியது. அந்த நகரின் பல பகுதிகளில் இந்தக் கழிவுகள் கொட்டப்பட்டன. இவற்றால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்கு கடும் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டன. ஒரு லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. தான் பொறுப்பில்லை என்று சொன்ன கம்பெனி கடைசியில் நஷ்ட ஈடாக 19 கோடி டாலர்கள் கொடுத்தது. கழிவுகளின் விஷத்தன்மை பற்றி ஆராய குழு நியமித்தது. மிண்ட்டன் அறிக்கை எனப்படும் இந்தக் குழுவின் அறிக்கையை விக்கிலீக்ஸ் அமபலப்படுத்தியது. 

சர்ச் ஆஃப் சயண்டாலஜி என்ற ஒரு கிறித்துவ அமைப்பு ரகசிய இயக்கமாகவும் பகிரங்க மிஷனரியாகவும் இயங்கிய அமைப்பாகும். வருடத்துக்கு 50 கோடி டாலர் சம்பாதிக்கும் இந்த அமைப்புக்கு போதைப் பொருள் உட்பட நிறைய வணிகங்கள் உள்ளன. உறுப்பினர்கள் கடத்தல், மர்ம மரணம் எல்லாம் நடந்தன. அமெரிக்க அரசின் பல துறைகளில் இதன் உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பதாக அமெரிக்க அரசே நடவடிக்கை எடுத்தது. இந்த அமைப்பின் ரகசிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டது. 

ஜூலியன் அதிரடியாக வெளியிட்ட ஆவணங்களில் ஆப்கானிஸ்தான், இராக் யுத்தங்களில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றிய ரகசியக் குறிப்புகள் முக்கியமானவை. இராக்கில் பாக்தாத் நகரில் ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர்கள் இருவர் அமெரிக்க ராணுவத்தின் வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்டதன் ராணுவ வீடியோவை ஜூலியன் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை அமெரிக்காவுக்குக் கொடுத்தது. கௌண்டனாமா பேயிலிருக்கும் அமெரிக்க ராணுவ சித்ரவதை முகாமின் ஆவனங்களையும் ஜூலியன் அம்பலப்படுத்தினார். 

இந்த வருடம் ஜூலியனும் விக்கிலீக்சும் நடத்திய அதிரடித் தாக்குதல் உலகம் முழுவதும் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் அந்தந்த நாடுகள் பற்றி தங்கள் அமெரிக்க மேலிடத்துக்கு அனுப்பி வந்த ரகசிய செய்திகளை வெளியிட்டதாகும். அமெரிக்கா உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிவருவதை இந்த ஆவணங்கள் நன்றாகவே அம்பலப்படுத்திவிட்டன. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், இராக் எல்லாரைப் பற்றியும் அமெரிக்கா வெளியில் சொல்வதற்கும் ரகசியமாக வைத்திருக்கும் கருத்துக்கும் சம்பந்தமே இல்லை.   

ஒவ்வொரு நாட்டு உள் அரசியலிலும் அமெரிக்கா தலையிடுவதை ஆவணங்கள் காட்டிக் கொடுத்துள்ளன. இந்தியாவில் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருவது ஆபத்து; பி.ஜே.பி, காங்கிரஸ் இருவருமே நமக்குச் சாதகமானவர்கள் என்று டெல்லியிலிருந்து அமெரிக்கத் தூதர் தேர்தல் சமயத்தில் கூறியிருக்கிறார். ராகுல் காந்தி, சோனியா, பிரகாஷ் காரத் என்று பலரைப் பற்றியும் கருத்துகளும் சொல்லியிருக்கிறார்.  

ஜூலியனும் விக்கிலீக்சும் பெரும் ஸ்தாபனங்கள் அல்ல. மொத்தம் ஐந்து பேர்தான் இதில் முழு நேர ஊழியர்கள். எண்ணற்ற ஆதரவாளர்கள். விக்கிலீக்சின் இணைய தளத்தை ஒரு நாட்டிலிருந்து செயல்படவிடாமல் தடுத்தால் இன்னொரு நாட்டில் இருந்து உடனடியாக இயங்கக் கூடிய அளவுக்குத் தயார் நிலையில் எப்போதும் விக்கிலீக்ஸ் இருந்து வருகிறது.

ஜூலியனையும் விக்கிலீக்சையும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட பல பெரிய நாடுகள் கடும் முயற்சி செய்கின்றன. இணைய தளத்துக்கான சர்வரை ரத்து செய்வது, யாரும் விக்கிலீக்சுக்கு இணைய வழியே பணம் நன்கொடை செலுத்த விடாமல் தடுப்பது என்று எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பயன் தரவில்லை. 

கடைசியாக ஜூலியனை ஸ்வீடனில் செக்ஸ் விவகாரத்தில் சிக்க வைத்து லண்டனில் கைது செய்தார்கள். ஏதோ பயங்கரவாதியைத் தேடுவது போல உடனே ஜூலியன் வாண்ட்டட் பட்டியலில் சேர்க்கப்பட்டு இண்ட்டர்போல் மூலம் எல்லா நாடுகளும் உஷார்படுத்தப்பட்டன. ஆனால் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜூலியன் எப்போதும் ஒரு இடத்திலேயே தங்காமல் ஊர் ஊராக நாடு நாடாக மாறிக் கொண்டே இருப்பவர். உலக அரசுகளை அம்பலப்படுத்தும் ஆவணங்களைத் திரட்டித் தொகுத்து வெளிப்படுத்துவதென்றால் சும்மாவா ? பல முறை விமான நிலையங்களிலேயே நாளைக் கழித்திருக்கிறார். கடைசியில் ஜூலியன் தானாகவே லண்டன் போலீசில் சரணடைந்தார். 

ஸ்வீடனில் ஒரு கருத்தரங்கிற்காக சென்றிருந்தபோது ஜூலியன் அன்னா, சோபியா என்ற இரு பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டார். அன்னா வீட்டில்தான் ஜூலியன் தங்கி இருந்தார். சோபியா தானாகவே அவரைத் தேடி வந்து தன் வீட்டுக்கு அழைத்துப் போனவர். எல்லாம் இரு தரப்பும் விரும்பி நடந்தவைதான். ஆனால் ஜூலியன் ஆணுறையைப் பய்னபடுத்தவில்லை. ஸ்வீடன் நாட்டு சட்டப்படி பெண் ஆணுறையுடன் தான் உறவு கொள்வேன் என்று சொல்லும்போது அதன்படி ஆண் நடந்துகொள்ளவில்லையென்றால் அது பாலியல் வன்முறைக் குற்றமாகும். இதற்கு நான்காண்டு சிறை தண்டனை வரை உண்டு.

ஜூலியனுடன் உறவு வைத்த அன்னா ஏற்கனவே ஸ்வீடன் தூதரக அலுவலராக கியூபா நாட்டில் இருந்த போது, காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்க சி.ஐ.ஏ பண உதவியுடன் வேலை செய்த தன்னார்வ அமைப்புடன் தொடர்பில் இருந்தவர். அதற்காக வெளியேற்றப்பட்டவர். தான் விரும்பியே ஜூலியனுடன் உறவு கொண்டதை வெளிப்படுத்தும் தன் டிவிட்டர் பதிவுகளையெல்லாம் அன்னா அழித்துவிட்டார் எனவே அமெரிக்கா திட்டமிட்டுத்தான் அவரை ஜூலீயனின் படுக்கையறைக்கு அனுப்பியிருக்கிறது என்று கருதப்படுகிறது. ஜூலியன் விடை பெற்றுச் சென்று சில நாட்கள் கழித்துத்தான் இரு பெண்களும் சந்தித்துப் பேசி போலீசில் புகார் தந்தார்கள். 

ஜூலியனை ஸ்வீடனுக்கு அனுப்பக்கூடாது. அப்படி அனுப்பினாலும் அங்கிருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அவரது வழக்கறிஞர்கள் இப்போது போராடி வருகிறார்கள். இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஜூலியன் உள்ளே இருந்தபோது கூட விக்கிலீக்சைத் தடை செய்ய முடியவில்லை. அடுத்தடுத்து அமெரிக்க அரசு ஆவணங்களை வெளியிட்டபடிதான் இருந்தது. ஜூலியனோ, விக்கிலீக்சோ, அவர்களுடைய ஆதரவாளர்களோ எதற்கும் அசருவதாக இல்லை. ஜூலியனுக்கு ஆதரவாக ஐரோப்பா முழுவதும் பேரணிகள் நடக்கின்றன. பிரேசில், ரஷ்ய நாட்டு அதிபர்கள் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜூலியன் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். ஆஸ்திரேலியாவின் குயினிஸ்லாந்து மாநிலத்தில் பிறந்த ஜூலியனுக்கு அப்பா யாரென்று தெரியாது. அம்மா கிறிஸ்டீன் ஒரு பொம்மலாட்டக் கலைஞர். ஜூலிக்கு ஒரு வயதானபோது கிறிஸ்டி மறுமணம் செய்தார். ஒரு தம்பி பிறந்தான். இந்தத் திருமணமும் முறிந்தது. தன் இரு குழந்தைகளை தன்னிடமிருந்து முன்னாள் கணவர்கள் பிரித்துவிடக் கூடாது என்பதற்காக கிறிஸ்டி ஊர் ஊராக ஓடி ரகசியமாக வாழ்ந்தார். தலைமறைவு வாழ்க்கை அப்போதே ஜூலிக்குப் பழகிவிட்டது. ஜூலியின் திருமணமும் முறிந்துவிட்டது. ஒரு மகன் இருக்கிறான். 

தன் 16வது வயதிலேயே கம்ப்யூட்டர் நிபுணராக திகழ்ந்தார் ஜூலியன். எந்த இணைய தளத்தின் ரகசிய பூட்டையும் உடைத்துத் திறந்து உள்ளே செல்லும் ஹேக்கிங் கலையில் அவர் ஒரு மேதையானார். ஹேக்கிங் பற்றி இரு நூல்கள் எழுதியிருக்கிறார். ஹேக் செய்பவர் எந்தக் கணிணியிலும் நுழையலாம். ஆனால் அதைப் பாழ்படுத்தக் கூடாது. தகவல்களை சிதைக்கக்கூடாது. பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்பது ஜூலியின் அறக் கோட்பாடு. கணிதம், இயற்பியல் எல்லாம் பல்கலைக்கழகங்களில் படித்தபோதும் அவர் டிகிரி முடிக்கவில்லை. விக்கிலீக்ஸ் தொடங்கியபின்னர் ஜூலியனுக்கு உலகம் முழுவதும் பல விருதுகள் வந்து குவிந்தன. 

பெரும் யானையைக் கூட சிறு அங்குசம் ஆட்டி வைக்க முடியும் என்பது போல உலக அரசுகளை ஆட்டி வைத்திருக்கும் விக்கி லீக்சின் ஜூலியன்தான் 2010ன் உலக நாயகன்.


2010ன் காமெடியன் விருது:
இந்த வருடத்தின் சிறந்த காமெடி நடிகர், காமெடி வசனகர்த்தா, பஞ்ச் டயலாக் புலி, எல்லா விருதுகளும் மானமிகு (மாண்புமிகு வரும் போகும் என்று வீரமணி சொல்லியிருக்கிறார்!) கலைஞர் கருணாநிதி அவர்களுக்கே வழங்கப்படுகின்றன. “நான் எப்போதும் கம்யூனிஸ்ட்தான்”, “நான் ஏழையாகப் பிறந்து ஏழைகளோடு வளர்ந்து, ஏழைகளுக்காக வாழ்பவன்”, “ராசா தலித் என்பதால் ஊழல் குற்றம் சுமத்துகிறார்கள்” “அவமரியாதைகளைத் தாங்கிக் கொள்லும் சுயமரியாதைக்காரன்” , “ இரு பெண்கள் ( நீரா ராடியா, பூங்கோதை) பேசிக் கொள்கிறார்கள். அதைப் பற்றி உங்களுக்கென்ன?” “ ராசாவுக்கு டெலிகாம் வேண்டுமென்று யாரும் யாரிடமும் கேட்கவில்லை” போன்ற எண்ணற்ற மறக்கமுடியாத நகைச்சுவை வசனங்களை 2010ல் உதிர்த்திருக்கும் கருணாநிதி, 2011ல் நவரச நாயகனாகப் பரிணமிக்கும் வாய்ப்பு பலமாக இருக்கிறது என்பதை நேயர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். 


நகைச்சுவை ஆறுதல் விருது:
காங்கிரஸ் ஒருபோதும் ஊழலை சகித்துக் கொள்ளாது என்று அறிவித்திருப்பதற்காக மன்மோகன்சிங்குக்கும் சோனியாவுக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

இ.வா.பூச்செண்டு:
தாமதமாகவேனும் சாகித்ய அகாதமி விருது தரப்பட்டிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இ.வா.பூ.

இ.வா.திட்டு:
வெங்காயம் முதல் அடிப்படைப் பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்திருப்பதைப் பொருட்படுத்தாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு இ.வா.தி.

கல்கி 26.12.2010

2010 - விகடனில் வந்த தொகுப்பு

இது விகடனில் வந்த தொகுப்பு. இன்று காலை என் நண்பன் எனக்கு இதனை அனுப்பி வைத்தான். உங்கள் பார்வைக்காக..

2010 டாப் 10 மனிதர்கள்!

நேர்மை ஐ.ஏ.எஸ்.,

ரும்பு மனிதன்! அதிகார அரசியலுக்கு வளைந்துகொடுக்கும் நாணல்களே அரசு அதிகாரிகள் என்பதைப் பொய்ப்பித்த உறுதி உமாசங்கரின் அடையாளம். 'நான் நன்றாகப் படித்து இருந்தால், ஐ.ஏ.எஸ்., ஆகி, அமைச்ச ரின் கார் கதவைத் திறந்துவிட்டுக்கொண்டு இருந்திருப்பேன்!’ என்று ஓர் அமைச்சர் திருவாய் மலர்ந்த அதே சமயத்தில், முரண்டு பிடித்த தமிழக முதல் அமைச்சரைத் தன் வழிக்குக் கொண்டுவந்த 'சாமான்ய’ ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அ.தி.மு.க-வின் 91-96 ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கொட்டகை ஊழலுக்குச் சிதை மூட்டியது உமாசங்கரின் முதல் ஹிட். தொடர்ந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி தான் பிறந்த திருவாரூரைப் புதிய மாவட்டமாக அறிவித்தபோது, இவரைத்தான் அங்கு ஆட்சியராக அமர்த்தினார். அடுத்த அ.தி.மு.க ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முழுக்க சேலத்தில் அமைதி வாசம். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எல்காட், கேபிள் டி.வி. கார்ப்பரேஷன், சிறுசேமிப்புத் துறை போன்ற பந்தாட்டங்களைத் தொடர்ந்து, உமாசங்கரைத் தற்காலிகமாகப் பணிநீக்கியது தமிழக அரசு. 'வளைந்து கொடுக்காதது, இஷ்டத்துக்கு இயங்காதது’ போன்றவை காரணங்களாக உலவின. உமாசங்கருக்கு ஆதரவாக சென்னை முதல் நெல்லை வரை ஆர்பாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று ஆதர வுக் குரல்கள் அரசின் கழுத்தை நெரித்தன. 'தேர்தல் நேரம்’ என்று தயங்கினார்களோ, 'நேர்மையாளன்’ என்று உணர்ந்தார்களோ உமாசங்கருக்கு மீண்டும் பதவி தரப்பட்டது.  சாதித்துக் காட்டினார் உமாசங்கர்! 

தமிழ்த் தம்பி! 

மிழகத் 'தம்பி’! 'பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம்  அறிமுகமான  கட்டபொம்மன்.  தமிழ்த் திரைப் பிரமுகர்கள் ராமேஸ்வரம் கடல் எல்லையில்  நின்று  ஈழத்  தமிழர்களுக்கு  ஆதரவு தெரிவிக்கும்  போராட்டம்  நடத்தினார்கள்.  அங்கு உணர்ச்சிப்பிழம்பாக வெடித்தவர்களுள் சீமானுக்கு முதலிடம். அந்தப் பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டி, இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைவித்ததாக இயக்குநர் அமீருடன் கைதானார். அடுத்து  நடந்த  நாடாளுமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம் செய்து, பெருந் தலைகளைக் காலி செய்ததில், சீமானுக்கு முக்கியப் பங்கு உண்டு. 'நாம் தமிழர் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 'என்  தமிழ்  மீனவனை  அடித்தால்,  இங்கு இருக்கும்சிங்கள  மாணவனை  நான் அடிப்பேன்’ என்ற சீமானின் உணர்ச்சிக்கு மீண்டும் பாய்ந்தது தேசியப்  பாதுகாப்புச் சட்டம். மீண்டும் மீண்டார். ஆங்கிலக் கலப்பற்ற தமிழ் பேசி, அரசியல் ஆர்வம்  உள்ள  தமிழ் இளைஞர்களை  அரவணைத்து, மேடைப் பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, சீற்றமாகச் செயல்படும் சீமானுக்கு எதிர்கால அரசியலில் நிச்சயம் ஓர் இடம் உண்டு!

களப் போராளி! 
 
த்திப்பூ அரசியல்வாதி! பொதுத் தொகுதியான குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற லதா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். சி.பி.எம் கட்சியின் பீடித் தொழிலாளர்கள் சங்கப் பொறுப்புகளில் இருந்தவரை சட்டமன்றத்தில் அமரவைத்தது, சளைக்காத... மலைக்காத மக்கள் பணி. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம், காங்கியனூர் திரௌபதி அம்மன் கோயிலில் தீண்டாமைக்கு எதிராக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த முற்பட்டார் லதா. மூன்று கிலோ மீட்டருக்கு முன்பே தடுத்து நிறுத்திய போலீஸ், பூட்ஸ் காலால் அவரது வயிற்றில் உதைத்தது. கர்ப்பப்பையில் சிதைவு ஏற்பட்டு, உதிரப்போக்கால் மயங்கிச் சரிந்தவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மீட்டார்கள். இன்னமும் அதன் பாதிப்பு இருக்கிறது. சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் எஃப்.ஐ.ஆரே பதிவு செய்தது 'கண்ணிய’க் காவல் துறை. குடியாத்தத்தில் ஜோதி நகர் என்ற இடத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 36 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வந்தது. ஆளும் கட்சிக்கு ஆதரவான ரியல் எஸ்டேட் குரூப் ஒன்று, அந்தக் குடும்பங்களை அடித்துத் துரத்தி, குடிசைகளை அப்புறப்படுத்தி இடத்தை ஆக்கிரமித்தது. நடுரோட்டுக்குத் தள்ளப்பட்ட 36 குடும்பங்களுக்கும் ஆதரவாகப் போராட்டத்தில் குதித்தார் லதா. வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார். அதே பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட போலீஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். எளியவர்களுக்காக வலியக் குரல் எழுப்பி வரும் லதா, அவர்களின் நலன்களுக்காகத் தன் உடலில் காயங்களைச் சுமக்கிறார்! 

மந்திரன்கள்!
ந்திய சினிமாவின் சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டரான 'எந்திரன்’ படைத்த பிரம்மாக்கள்! 'ஏ, பி, சி’ என்று தமிழகத்துக்குள் ஏரியா பிரித்துப் பேசிக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவுக்கு, உலகம் முழுக்க வர்த்தகக் கம்பளம் விரித்தான் 'எந்திரன்’. 'மிரட்டல் மேக்கிங்கில் இந்தி சினிமாக்கள்தான் இந்திய சினிமாவின் அத்தாரிட்டி’ என்ற நிலைக்கு 'டாட்’ வைத்தார் இயக்குநர் ஷங்கர். ஆக்ஷன் ஹீரோ ஃபார்முலா துறந்து, எந்திரனின் மூன்று வேடங்களுக்கும் வித்தியாசம் நிரப்பி முத்திரை பதித்தது ரஜினியின் சின்சியாரிட்டி. 'உசிலம்பட்டி முதல் நியூயார்க் சிட்டி’ வரை 'எந்திரன்’ எதிர்பார்ப்பை எகிறவைத்து, பாக்ஸ் ஆபீஸ் பெட்டிகளை நிரப்பியது கலாநிதி மாறனின் வணிகம். இந்தியா முழுக்க அலையடித்தது 'எந்திரன்’ ஜுரம். உலகத்துக்குப் பந்திவைத்து, கல்லா கட்டிய சாமர்த்தியத்தில் இந்த மூவரும், த்ரீ ஸ்டார் முன்னோடிகள்!

       ஜோர்யா! 

2010-ன் 'சிங்கிள் சிங்கம்’! ரசிகர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் என சினிமாவின் அத்தனைப் பிரிவு மனிதர்களின் 'மோஸ்ட் வான்டட்’ செல்லம். தணியாத தாகம், தாளாத வேகம் எனத் தன் முயற்சியில் சினிமா கற்று உயரம் தொட்டவர். சத்தம் இல்லாமல் ரஜினி, கமல் வியாபாரத்தை அடுத்து உலா வந்தவர். யாருக்கும் பிடிபடாத படங்களின் தேர்வு சூர்யா வுக்கு அமைந்தது, இன்னும் யாருக்கும் பிடி படாத சூட்சுமம். சிங்கமாகவும் கூச்சலோடு மிரட்டுகிறார், கிளாஸிக் காதலனாகவும் கனி கிறார். எல்லாம் வருகிறது சூர்யாவுக்கு. சீனியர்களின் மேஜிக், ஜூனியர்களின் சின்சியாரிட்டி என சூர்யா தன்னைத்தானே செதுக்கிக் காட்டியதுதான் வெற்றி வழிச் சாலை. 'நம்பர் ஒன்’ இடத்தைத் துரத்த ஆரம்பித்தவருக்கு, காலம் பரிசளித்தது இந்தத் தனி இடம், தன்னம்பிக்கைத் தடம்!

'பேட்’ பாய்! 
 
20/20 துறவி! இந்திய கிரிக்கெட்டின் போஸ்டர் பாய் முரளி விஜய். 20/20 கிரிக்கெட் டில் புயல் வேகம், டெஸ்ட் கிரிக்கெட்டில் நிழல் அடக்கம் என முரளியின் இந்த வருட பெர்ஃபார்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியில் இடத்தைத் தக்கவைத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட்டில் சச்சினுடனான 308 ரன்கள் பார்ட்னர்ஷிப்பின்போது முரளி விஜய் குவித்தது 139 ரன்கள். ஆஸ்திரேலியா விடம் இருந்து வெற்றியைப் பறித்த இரும்பு இன்னிங்ஸ் அது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 'ஐ.பி.எல் சீஸன் - 3’, 'சாம்பியன் லீக் 2010’ ஆகிய இரண்டு போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வெல்ல அடித்தளம் அமைத்தது முரளி விஜய்யின் ஓப்பனிங் அதிரடி. கிரிக்கெட் டுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விஜய், 17 வயதில்தான் முறையாகக் கிரிக்கெட் பயிற்சியே எடுக்க ஆரம்பித்தார். 2011 ஐ.பி.எல் போட்டி களுக்கு என டிராவிட், அனில் கும்ப்ளே, கௌதம் காம்பீர், சௌரவ் கங்குலி ஆகிய முக்கிய வீரர்களே ஏலத்துக்கு வந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்திருக்கும் டோனி உள்ளிட்ட நான்கு பேரில் முரளி விஜய்யும் ஒருவர். அணிக்குள் முரளிக்கு செல்லப் பெயர் 'மாங்க்’ (துறவி)!


          அனல் மலர்!
திர்ப்பு நெருப்பு! தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு பாடல் எழுத வந்த இரண்டாவது பெண் பாடலாசிரியர் தாமரை. பாடல் வரிகள் சொற் குப்பைகளாலும் ஆபாச வார்த்தைகளாலும் அழுக்குப் பட்டுக் கிடந்தபோது, கவித்துவத்தின் அடர்த்தியால் அழகியல் கூட்டி அர்த்தம் சேர்த்த மலர். 'அழகிய அசுரா’, 'கலாபக் காதலா’ எனப் புதிய சொற் சேர்க்கைகள் மூலம், தமிழ் மீதான காதலை அதிகப் படுத்தியவர். 'எமக்குத் தொழில் பாடல் எழுதுவது!’ என்று ஒதுங்கி ஒடுங்காமல், சில அரசியல் பிடிவாதங்களைப் பின்பற்றிப் பாடல்கள் எழுதும் கொள்கைப் பெண். ஆங்கில வார்த்தைகள் கலவாத பாடல்கள் மட்டுமே தாமரை இதழ்களில். பாடலாசிரியர், கவிதை என்கிற களங்களைத் தாண்டி அநீதிக்கு எதிராக உரத்த குரல் எழுப்பும் படைப்பாளியாகத் தாமரையின் அடையாளம் தனித்துவம் அடைந்தது இந்த வருடம். இலங்கை இனப் படுகொலைக்கு எதிரான போராட்டங் களை, போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் உண்ணாவிரதங்களை எடுத்து நடத்தியதில் முன்னுக்கு நின்ற முக்கியப் படைப்பாளி. தமிழ் வழிக் கல்வி, பெண்ணியம், தேசிய இனப் பிரச்னைகள், சாதி ஒழிப்பு என சுற்றிச் சுழலும் தாமரையின் பேனா, அரசு அதிகாரங்களுக்கு ஆதரவாகத் தலை குனியாதது தமிழர்களின் தன்மான ஆறுதல். ஈழப் போராட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியின் துரோகம் தொடங்கி, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான எதிர்ப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது வரை, இடைவிடாது இயங்கும் எதிர்ப்பின் இருப்பு. 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்’ தாமரையின் தணல் வரிகளுக்கு ஒரு துளி நெருப்புப் பதம்!

            உடைப்பாளி!
னல் ஆளுமை! 'தீண்டாமை ஒரு பாவச் செயல்’, 'தீண்டாமை ஒரு பெருங் குற்றம்’, 'தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்’ என்ற பாடப் புத்தக வரிகளுக்கு யதார்த்த செயல் வடிவம் கொடுத்த சிவப்புச் சிந்தனைக்காரர் சம்பத். 2007-ல் தீண்டாமை ஒழிப்புமுன்னணி யின் மாநிலத் தலைவர் ஆனார். இரண்டு ஆண்டுகளில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் தெருக்களில் இறங்கிப் போராடியதும், போராட்டத்தின் வெற்றியை ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உடமையாக, உரிமையாக மாற்றியதும் சம்பத்தின் சாதனைகள். அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ச்சியாக நடத்திய போராட்ட அழுத்தத்தால்தான் தமிழக அரசு அதைச் சட்ட வடிவம் ஆக்கியது. 19 ஆண்டுகளாக திரை போர்த்திக்கொண்ட உத்தபுரம் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அஸ்திவாரம் பாய்ச்சி இருந்த திருச்சி எடமலைப்பட்டி புதூர், கோவை பெரியார் நகர் தீண்டாமைச் சுவர்களை உடைத்தது, தமிழகம் முழுவதும் 17 கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தியது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களுக்குக் கிடைத்த பொருட்படுத்தத்தக்க வெற்றி. 1,845 கிராமங்களில் ஆய்வு நடத்தி, 83 வகையான தீண்டாமை வடிவங்களையும் 23 வகையான வன்கொடுமைகளையும் கண்டறிந்து வகைப்படுத்தி இருக்கிறார் சம்பத்!  

   இசைப் பயல்! 

ளமை இசைத் தமிழன் ஜி.வி. பிரகாஷ்! 'ஆயிரத்தில் ஒருவன்’ படத் தின் 'தாய் தின்ற மண்ணே...’ இசை யில் விஜய் யேசுதாஸ் குரல் இழைந்த போது, ஈழத்தை நினைத்துத் தழுதழுத் தது தமிழகம். 'அங்காடித் தெரு’வின் 'உன் பேரைச் சொல்லும்போதே...’ பாடல் மென் சோகம் தடவிய மெலடி உணர்வுகளை உருக்கியது. அதே படத்தின் 'கதைகளைப் பேசும் விழி யருகே’ பாடல் இந்த வருடத்தின் காதல் தாலாட்டு. 'மதராசபட்டினம்’ படத்தின் 'பூக்கள் பூக்கும் தருணம்...’ பாடலுக்கு முன் உற்சாகமாக உதிக்கும் 'தானனோம்த்ததனா...’ ஹம்மிங்கில் பட்டாம்பூச்சி பறக்கவைத்தார் ஜி.வி. 'ஆடுகளம்’, 'சிந்துபாத்’, 'தெய்வ மகன்’ என்று ஜி.வி-யின் இசை கிராஃப் கியர் தட்டி இன்னும் உயரம் நோக்கிப் பயணிக்கிறது!

    சிரிப்பேன்டா! 

'நண்பேன்டா’ நண்பன்! சின்னத் திரை டு வெள்ளித் திரைப் பயணத்தில், இந்த பல்லாவரம் பையனுக்கு இது பீக் பீரியட். காமெடியன் தோற்றமே இல்லாமல், 'சேட்டுப் பையன்’ தோற்றத்தில், சந்தானத்தின் 'ஆயா, பாயா’ அதிர் வேட்டுகள் சின்னத் திரையைத் தொடர்ந்து, மல்ட்டிப்ளெக்ஸ்களை யும் அதிரவைத்தன. சந்தானத்தை ஹீரோவின் 'நண்பேன்டா’வாகக் கமிட் செய்த பிறகு, ஹீரோக்களை கமிட் செய்யும் காலம் இது. ஹீரோ ஆசையை உதறி, காமெடி பஜாரை லீஸுக்கு எடுத்தது புத்திசாலித் தனம். நகரத்தின் மிடில் கிளாஸ் இளைஞர்களை சினிமாவுக்குள் பிரதிபலிக்கும் சந்தானத்துக்கு வந்தனம்!

2010 டாப் 10 நம்பிக்கைகள்!

திவ்யா

இந்திய ராணுவ வரலாற்றில் 'Sword of Honour’ என்ற பெருமித வாளேந்திய முதல் தமிழச்சி. கல்லூரி மாணவியாக இந்தியக் குடியரசு தினத்தன்று டெல்லி அணிவகுப்பில் ராணுவ அதிகாரிகளைச் சந்தித்தார். ராணுவத்தின் மேல் காதல் கொள்ளவைத்த நிகழ்வு. நாட்டின் அனைத்து ராணுவப் பயிற்சி மைய மாணவர்களில் அட்டகாச 'ட்ராக் ரெக்கார்டு’க்காக வழங்கப்படும் 'Sword of Honour’ என்ற அங்கீகார வாளினை இதுவரை ஆண்கள் மட்டுமே  வென்றிருக்கிறார்கள். அதைத் தகர்த்து, கௌரவ வாளேந்தி தமிழகத்துக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் கௌரவம் சேர்த்த மறத் தமிழச்சி. தற்போது லெப்டினென்ட் பொறுப்பில் காஷ்மீரில் இந்திய எல்லைக்கு அரணாக நிற்கிறார் திவ்யா!

ஸ்ரீதர்
28 வயதில் சோதனைகளை உரமாக்கி, சாதனைகளை வரமாக்கிய நம்பிக்கை நாயகன்! தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் ஆடு மேய்க்கும் அப்பா, தன் மூப்பால் தளர்ந்துவிட, ஸ்ரீதரின் படிப்பு பத்தாம் வகுப்போடு நின்றுபோனது. கைத்தறி மில் வேலையில் இருந்த ஸ்ரீதரை சென்னைக்கு அழைத்து வந்தது வில் வித்தை ஆர்வம். வில் வாங்கப் பணம் இல்லாமல், ராணுவத்தில் சேர்ந்து இலவச  வில் வித்தை பயிற்சி எடுத்தார். ஆறு வருடங்கள் கடுமையான ராணுவப் பயிற்சிகளோடு,  தினமும் எட்டு மணி நேரம் வில் வித்தை பயிற்சி எடுத்தவர், கடந்த காமன் வெல்த் போட்டியில் வில் வித்தை காம்பவுண்ட் போட்டிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். வெச்ச குறி தப்பாத  தன்னம்பிக்கைத் தமிழன்!

ப்ரீத்தி-கார்த்திகேயனி
தானே முளைத்து, தானே துளிர்த்து வெற்றிக் கோப்பையை எட்டிப் பிடித்திருக்கும் சதுரங்கச் சகோதரிகள். சர்வதேச செஸ் போட்டியில் இரண்டாம் இடம், ஆசிய விளையாட்டுப் போட்டி யில் மூன்றாம் இடம், ஜூனியர் காமென்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் எனப் பரிசுகள் குவிக்கும் ப்ரீத்திக்கு முறையான பயிற்சியும், பயிற்சியாளரும் கிடையாது. இருந்தும் இரண்டு வருடங்களாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் காமன்வெல்த் போட்டியின் முதல் இடம் ப்ரீத்திக்குத்தான். மதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, கல்லூரியில் சக மாணவர்களின் லேப்டாப்பில் செஸ் பயிற்சி எடுத்து, சர்வதேசப் போட்டியில் நுழையக் காத்திருக்கிறார் ப்ரீத்தி. அவரின் நிழலாக வளரும் தங்கை கார்த்திகேயனியும் சாம்பியன்தான். மாவட்ட அளவில் 40 முறையும், மாநில அளவில் ஐந்து முறை யும் வென்று, தேசிய அளவுக்கு முன்னேறி இருக்கிறார் கார்த்தி கேயனி. வாங்கிய பரிசுகளை அடுக்கக்கூட இடம் இல்லாமல், பரண் மேல் போட்டுவைத்திருக் கும் சதுரங்க ராணிகளுக்குக் காத்திருக்கிறது 'சர்வதேச மரியாதை’!

சந்தோஷ் குமார்
வரெஸ்ட் ஏறிய தமிழன்! சிகரம் ஏறியதும் 'தமிழ் வாழ்க’ என எழுதிய அட்டையை உயர்த்திப் பிடித்து, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். 'சிறார் பாலியல் வன்கொடுமை’க்கு எதிரான விழிப்பு உணர்வுதான் சந்தோஷின் சாகசப் பயண நோக்கம். எவரெஸ்ட் தொட இவருக்குத் தேவைப்பட்டது 67 நாட்கள். ஆனால், இதற்காக வேலையை விட்டுவிட்டு பயிற்சி எடுத்த காலமோ ஒரு வருடம். உலகின் முக்கியமான ஏழு சிகரங்கள் மீதும் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது இவரது லட்சியம். இரண்டில் ஏற்கெனவே கால் பதித்துவிட்டார். இன்னும் ஐந்து சிகரங்கள் 'தமிழ்’ தொடக் காத்திருக்கிறது!

உதயகுமார்
ந்திய நாணயத்தின் புதிய குறியீடு '’ உதயகுமாரின் எண்ண வண்ணம்! தேசம் முழுக்க 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்ற வடிவமைப்புப் போட்டியில் உதயகுமாரின் டிசைன்தான் பட்டம் தட்டியது. மும்பை ஐ.ஐ.டி-யில் 'தமிழ் டைப்போகிராஃபி’யில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், தற்போது வடிவமைப்புத் துறைப் பேராசிரியராக இருப்பது கவுஹாத்தி ஐ.ஐ.டி-யில்! தேவநாகிரி மற்றும் ரோமன் எழுத்துக்களைக்கொண்டு இவர் அமைத்த குறியீடு, இன்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விசைப் பலகையில் தனி இடம் பிடித்திருக்கிறது. தற்போது, பிராந்திய மொழிகளின் ஆரம்ப கால வடிவமைப்புகளை மீட்டெடுத்து ஆவணப்படுத்தும் முனைப்பில் இருக்கிறார் உதயகுமார்!

ரவிச்சந்திரன் அஸ்வின்
அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்திருக்கும் ஸ்பின் மன்னன். 'கேரம் பால்’ என்கிற புது உத்தி மூலம் விக்கெட்டு களை பாக்கெட் செய்யும் கிரிக்கெட் தமிழன். 2009-ம் ஆண்டு அஸ்வின் தலைமை யிலான தமிழக அணிதான் ஒருநாள் போட்டிகளில் தேசிய சாம்பியன். 'சாம்பியன்ஸ் லீக்’ பந்தயத்தில் 13 விக்கெட்டுகளை அள்ளி கோல்டன் விக்கெட் விருது வென்றது சுழற்பந்து வரலாற்றில் ஓர் அதிசய சாதனை. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஸ்பின் ஆயுதம் மூலம் இந்திய அணிக் குக் கோப்பை வெல்ல உதவ வேண்டும் என்பது அஸ்வினின் கனவு. கனவு மெய்ப்பட, தீவிரமாகக் கையைச் சுழற்றிக்கொண்டே இருக்கிறார் அஸ்வின்!  

பாலாஜி
'மிட்டாய் வீடு’, 'காதலில்  சொதப்புவது  எப்படி?’,  'ஜூனியர்ஸ்’,  'அடிடெய்ல்’ என நான்கே குறும்படங்களில் கவனம் ஈர்த்த இளைஞன். 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இறுதி வரை முத்திரை பதித்த கலைஞன். ரசனை ஹியூமர், கவிதை கிளாமர், எக்ஸ்பிரஸ் ஃபீவர் எனப் பரபரக்கும் பாலாஜியின் குறும்படங்கள், யூ டியூபில் ஹிட். பிரசாத் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் எடிட்டிங் மற்றும் சவுண்ட் படித்த பாலாஜி, பணிபுரிந்தது ஒரே ஒரு திரைப்படத்தில்தான். விரைவில் வெள்ளித் திரையிலும் 'ஸ்டார்ட்... கட்’ சொல்லவிருக்கும் பாலாஜிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

யுவராஜா
ருணாநிதி என்னும்  கழக யானையின் காதில் புகுந்த காங்கிரஸ் கலகச் சிற்றெறும்பு! தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 'காங்கிரஸில் இன்னும் ஒரு கோஷ்டி!’ என்றுதான் அவர்களே நினைத்தார்கள். ஆனால், யுவராஜா தெருத் தெருவாக, ஊர் ஊராக மக்களைச் சந்தித்து, பிரச்னைகளைக் கேட்டார். காங்கிரஸ் தொண்டர்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுத்தார். 'தி.மு.க. மந்திரிகள் சொத்துக் கணக் கைக் காட்ட வேண்டும்’ என்பதில் ஆரம்பித்து, 'தமிழ் சினிமா, சில தனி மனிதர்கள் கையில் சிக்கி இருக்கிறது. அவர்களுக்கு எங்கே இருந்து பணம் கிடைக்கிறது?’ என்பது வரையிலான இவரது கேள்விகள், தி.மு.க-வுக்குத் திருகு வலியாக அமைந்தன. காங்கிரஸின் கோஷ்டி கான அரசியலுக்கு மத்தியில் யுவராஜா...  நிச்சயம் புது ரத்தம்!

அமலா பால்
னதைக் கொத்திய 'மைனா’ பொண்ணு! இரண்டே படங்களில் முதல் இடம் தொட்ட கேரளப் பைங்கிளி. 'சிந்து சமவெளி’யில் அனகாவாக வந்து கொஞ்சம் சறுக்கியவரை, காடு மலையேற்றி உயரப் பறக்கவைத்தது 'மைனா’! சினிமா வாசனையே இல்லாத நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, முதல் தலைமுறையில் முளைத்து வந்த எர்ணாகுளத்துப் பெண். விக்ரம், ஏ.ஆர்.முருகதாஸ் என முன்னணிப் படைப்பாளிகளும் தேடுகிற தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை!

அம்பிகா ஐ.பி.எஸ்.,
திண்டுக்கல்லில் வறுமை உறவாடும் குடும்பத்தின் மூத்த பெண் அம்பிகா. பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தவரை மேற்கொண்டு படிக்கவைக்க வசதி இல்லாத நிலையில், உதவிக் கரம் நீட்டினார் திஹார் ஜெயில் கான்ஸ்டபிள் திருப்பதி. அம்பிகாவைத் திருமணம் செய்து மேற்படிப்பு படிக்கவைத்தார் திருப்பதி. குடும்பச் சூழல் சுழற்றி அடித்தாலும் திருப்பதியின் துணையோடு டெல்லியிலுள்ள சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தார் அம்பிகா. மூன்றாவது முயற்சியில் அம்பிகா, 'ஐ.பி.எஸ்’ ஆனார். இப்போது மகாராஷ்டிரா அகமது நகரின் ஏ.எஸ்.பி. அம்பிகா.  அம்பிகாவுடையது - திருப்பதியுடையது என்று பிரித்துப் பார்க்க முடியாத 'ஒரு ஆதர்ச தம்பதி’யின் வெற்றி இது!


Wednesday, December 29, 2010

தென்மேற்குப் பருவக்காற்று

 இரண்டு மிக பெரும் மொக்கை படத்தை பார்த்தது இல்லாமல்  தென்மேற்குப் பருவக்காற்று அப்படி தான் இருக்கும் என முடிவு செய்து பார்த்தேன். ஆனால், என் நினைப்பு அனைத்தையும் பொய்யாகிய அருமையான திரைகாவியம் தென்மேற்குப் பருவக்காற்று. கிராமத்தில் நடக்கும் ஆட்டு திருட்டை பற்றி தான் கதை. அதனுடன் காதல், கோபம் செண்டிமெண்ட் என அனைத்தும் நிறைந்து இருந்தது இந்த தென்மேற்குப் பருவக்காற்று.

கதை :

ஆட்டுக் கொட்டாயை மேய்த்துவரும் வாலிபனுக்கும், ஆட்டுக்கிடாக்களை ராவோடு ராவாக திருடும் குடும்பத்துப் பெண்ணுக்குமான காதல் தான் இந்த தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் கதை.
படம் முழுவதும்  தேனி மாவட்டத்தில் நடை பெறுகிறது.. அதை படமிக்க விதம் மிக அருமை. படத்தை ஆரம்பிக்கையில் டைட்டில் சாங் அந்த பாட்டுக்கு தேவையான புகை படம் என நிமிர்த்து உட்கார வைத்து விடுகிறார்கள்..
முதல் இருபது நிமிடம் எந்த திசையில் கதை செல்கிறது என நம்மால் யுகிய முடியவில்லை. ஆனால், அது கூட ரொம்ப நன்றாகவே, மற்றும் காத பத்திரத்தின் தன்மையை அறிந்து அனைவரும் இயல்பாகவே நடித்து உள்ளனர்..
வெயில் படத்தை போலவே  இரவில்  காட்சி ஆரம்பம். ஆடி திருடும் கும்பல் ஒன்று இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு பல்வேறு ஆடுகளைத் திருடிக்கொண்டிருக்கிறது. ஒரு சமயம் அவர்கள் திருடுகையில், நம் நாயகன் அந்த குடத்தில் ஒருவனை பிடித்து விடுகிறான்.. கடைசியல் பார்த்தால் அவள் தான் நாயகி.. பார்த்ததும் காதல்.. இதனை தெரிந்த அண்ணன்கள் என்ன செய்தார்கள் என்பதை மிக அழகாக சொல்லி உள்ளார் படத்தின் இயக்குனர்..
நடிகர், நடிகைகள் :

சரண்யா : ஒரு கிராமத்தின் தாயின் குணத்தை அப்படியே பிரதிபலித்து உள்ளார். 
கதாநாயன் பெயர் தெரிய வில்லை. ஆனால், நிறைவாக செய்து உள்ளார். நாயகி, பேராண்மை படத்தில் நடித்தவர் என்று நினைக்குறேன். முதல் படத்தின் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பு கனகச்சிதம் .ரேணிகுண்டாவில் “ வந்தவர் இதிலும் நகைச்சுவையில் கலக்கி உள்ளார். அவரின் டயலாக் டெலிவரி மிக அருமை. சில இடங்களில் தற்பொழுது இருக்கு விலைவாசி மற்றும் அரசியல் நையாண்டி அனைத்தும்  இதில் அடங்கும். நாயகியின் அண்ணன் நான் மகான் அல்ல படத்தில் நடித்தவர். அவரும் மிரட்டி இருக்கிறார்.
இதற்க்கு எல்லாம் மேல் நாயகனின் முறை பெண்ணாக வரும் பொண்ணு நடிப்பு சூப்பர். இயல்பான, அதுவும் தன்னம்பிகையின் உடன் அவள் பேசும் வசனமும் மிக மிக நல்லா வந்து உள்ளது படத்தில்.. இன்னும் என் மனதில் நிற்கிறது. 
படத்தின் பலவீனம் எது என்றால் வாய் அசைப்பு ஏற்ற  வசனம் வராதது.. மற்றும் முதல் இருபது  நிமிடம் . மற்ற அனைத்தும் நலமே..
எனக்கு  பிடித்தவை  :
குடிக்கிற தண்ணி ஒரு ருபாய், ஒண்ணுக்கு போறதுக்கும் ஒரு ரூபாயா ?  
பெண்களிடம் கண்ணை பார்த்து பேச கூடாது ..


தன்னை வேண்டாம் என்று சொன்ன ஹீரோவிடம்  வந்து அவனின் முறை பெண்
வருடைய புகைப்படத்தைக் கொடுத்து “இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா..”  என்றும் அதனை சுற்றி அவள் கூறும் வசனம்
உங்கள் அம்மா ரூபாய் 50,000 கேட்டார்கள்.. கடன் வங்கி கல்யாணம் பண்ணலாம்.. எனக்கு கட்டு வேலை எல்லாம் தெரியும்.. நாம் சீக்கிரமே அதனை அடைத்து சந்தோசமாக இருக்கலாம் என்று கூறும் இடம்.. 
 டிஸ்கி :

 இது சரண்யாவின் நூறவது படம்..


தென்மேற்குப் பருவக்காற்று - கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரை படம்

காந்திபுரம்

படத்தின் பெயரை பார்த்து இது மொக்கை படம் என நல்லாவே தெரியும். நான் இது ஒரு தேசிய கதையை மையமாக வைத்து எடுக்க பட்டு இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.

ஆனால், பார்க்கணும் ஆசை. ஏன் என்றால் இது போல படங்கள் பார்த்தால் தான் பொறுமை வருகிறது.

இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம். இந்த படத்தை தமிழ் படம் போல் விளம்பரம் செய்து தயரிப்பாளர் கல்லா கட்டி உள்ளார். சரி கதைக்கு போவோம். 

மும்பைல மிக கொடுரமான தாதாவை தட்டிக்கேட்கும் அர்ஜுன் ( இதுக்கு ஒரு பிளாஷ் பேக்  வேற ) ஒரு கட்டத்துல தாதா ஆக்க படுகிறார் . தான் மனைவி இடம் கொடுத்த    சத்தியம், வாக்கு ஆகியவை நிறைவேற்றுவதர்கக   அங்கே நடந்த விபத்தில்  இறந்து போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துஸ் அமைதியின் சொருபமாக செட்டில் ஆகிறார். இங்கே  2 தங்கச்சிங்க,2 பேரும் லவ் பண்றாங்க.அந்த பசங்களின் தந்தை மற்றும் கண்டிப்பானவராக நாசர்.. தங்கைகளின் காதல் கை  சேர்ந்ததா   என்பதே இந்த காந்திபுரம்..

அர்ஜுன்: 

வழக்கம் போல எதிரிகளை பந்தாடுகிறார்.  தெலுகு படத்தை பார்த்தால் காதுல பூ வைத்து கொண்டு தான் பார்க்கணும் என் நண்பன் சொல்லுவான். இந்த படத்தில் சண்டை கட்சியை பார்த்து எனக்கு ஒரே சிரிப்பு..

பாடல்கள் :

கேட்கவும் முடியல, பார்க்கவும் முடியல..

ஜூனியர் என் டி ஆர்:

இவருக்கு சண்டை காட்சி ரொம்ப நல்ல வருது. ஆளும் ஸ்மார்ட் தான் . தமிழ் டுப்பிங் குடுத்த ஆளை தேடி பிடிச்சு உதைக்கணும்..


காந்திபுரம் - தில் இருந்தா பாருங்க..

"மன்" "மதன்" " "அம்பு "

பொதுவாக எனக்கு கமல்ஹாசனின்  படங்கள் பிடிக்கும். படம் நன்றாக இருந்தால் சூப்பர் ஹிட், இல்லேன்னா பிளாப். அது தான் கமல். இது ரவிக்குமார் அவர்களுக்கும் பொருந்தும்.  ரவிக்குமார் கமல் கூட்டணியில் வந்த அத்தனைப் படங்களும்  நகைசுவைக்கு பிரதான முக்கியத்துவம் இருக்கும் .அவ்வை சண்முகி ,தெனாலி ,பஞ்ச தந்திரம் ;  தசாவதாரம் . இந்த வருசையில் மன்மதன் அம்பு இருக்கும் என எதிர்பார்த்து படம் பார்த்த அனைவரயும் இந்த படம் திருப்தி படுத்தியதால் என்றால் கண்டிப்பாக இல்லை என்பேன்..

நடிகை நிஷாவும் ( த்ரிஷா )  தொழிலதிபர் மதனகோபாலும் ( மாதவன் ) காதலிக்கிறாங்க. மதனகோபால் நிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மேஜர் மன்னார் ( கமல் ) மூலமாக அவரை வேவு பார்க்கிறார். தனது நண்பனை காப்பதற்கு மேஜர் மன்னார் பொய் சொல்லி  மதனகோபாலும் நடிகை நிஷாவும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

நரையோடிய தாடி, அதையும் மீறி இழையோடும் இளமை என்று பயம் வர  வைக்கிறார் கமல்.  வழக்கமான கமல் படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் ரொம்பவும் அடக்கி வாசித்திருக்கிறார். கமல் அறிமுகமாகும் காட்சி தவிர்த்து சண்டைக்காட்சி என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். ஹீரோ போல அறிமுகமாகி, பின்னர் அமெரிக்க மாப்பிள்ளை போல தடம் மாறி, வில்லனாக உருவெடுத்து இறுதியில் ஒரு இரண்டாம் நாயகனாக முடிக்கிறார். பாதி படத்தில் சரக்கும் சரக்கு நிமித்தமுமாகவே வளம் வருகிறார். போதையில் இருப்பவர்களின் பேச்சுமுறை மற்றும் பாடி லாங்குவேஜ் காட்டுவதில் கலக்கியிருக்கிறார்.

த்ரிஷா தன் சொந்த குரலில் நன்றாக பேசி உள்ளார். ஆனால், நடிப்பு ஹ்ம்ம்..

சங்கீதா நன்றாக நடித்து உள்ளார்.. இந்த படத்தில் எந்த ஒரு காட்சியும் மனதில் ஒட்டவே இல்லை.. இது இன்னொரு மும்பை எக்ஸ்பிரஸ்..

கடைசி இருபது நிமிடங்களில் ஆள் மாறாட்டக் காட்சிகளில் மட்டுமே காட்சியமைப்புகளின் மூலமே நகைச்சுவையைக் கொண்டு வந்திருக்கிறார்.

ஆனால், crazy மோகன் இல்லது நன்றாகவே தெரியுது படம் முழுவதும் ..

நம்ம ஞானி சார் பையன் தான் படத்துக்கு ஒளிபதிவு.. ஐரோபியவை நன்றாக படம் பிடித்து காட்டி உள்ளார்..

படத்தில் பிடித்த வசனம் :

-          வீரத்தின் உச்சகட்டம்  அகிம்சை .
-          சிட்டி பொண்ணுங்களை சைட் அடிங்க. வில்லேஜ் பொண்ணுங்களை மேரேஜ் பண்ணுங்க.
      -          பொய் எப்பவும் தனியா வராது. கூட்டமா தான் வரும்.



அடுத்தவர்களின் படத்தை மொத்தமாக  வாங்கி மிகக்  லாபம் பார்க்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தை மட்டும் ஏன் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு மொத்தமாக விற்றார் என்பது படம் பார்க்கும் அனைவரும் புரிந்து கொள்வார்கள்..

மைனா படத்தில் பல கோடி லாபம் பார்த்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தைச் சொந்தமாக ரிலீஸ் செய்திருந்தால் இதே அளவுக்கு நிச்சயம் நஷ்டத்தைத்தான் சந்தித்திருப்பார் என்று ஊகிக்க முடிகிறது..


16 ஆயிரத்து 445 கோடி..

இன்று  நான்  படித்த  அதிர்ச்சியான  செய்தி 

கடந்த 2003 நவம்பர் முதல் தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையில் 2,000 கோடி ரூபாய் வரை அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசும் மது இலக்கு விற்பனையை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நிர்ணயிக்கப்படும் இலக்கை தாண்டி மது விற்பனையில் சாதனை படைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7,434, "டாஸ்மாக்' கடைகள் மூலம் மது விற்பனை மேற் கொள்ளப்படுகிறது. இந்த மது விற்பனை கடைகளில் விற்பனையாளர், கடை மேற்பார்வையாளர், ஏரியா சூப்பர் வைசர் என 34 ஆயிரத்து 323 பேர் பணி செய்து வருகின்றனர். தினம் தோறும் சராசரியாக 1.26 லட்சம் பெட்டிகள் ஐ.எம்.எஃப்.எல்., மது பானங்களும், 57 ஆயிரம் கேஸ் ( ஒரு கேஸில் 12 பாட்டில்) பீர் பாட்டில்களும் விற்பனை நடந்துள்ளது. வார நாளில் சாரசரி விற்பனை அளவு 45 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இதுவே சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மது விற்பனை சராசரியாக 53 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா நாட்களின் சராசரி மது விற்பனை 92 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது. தமிழக, "டாஸ்மாக்' மது விற்பனை நிதியாண்டு அடிப்படையில் (மார்ச் -பிப்ரவரி என 12 மாதங்கள்) கணக்கிடப்படுகிறது. அது மட்டுமின்றி ஆண்டின் அடிப்படையிலும் மது விற்பனை கணக்கிடப்படுகிறது. அத்துடன் தமிழகத்தில் மாதம் தோறும் மாவட்ட வாரியாக மேற் கொள்ளப்படும் மது விற்பனை குறித்த தகவல், அந்தந்த மாதத்தின் கடைசி நாளில் மாநகர பகுதி எனில் போலீஸ் கமிஷனருக்கும், மாவட்ட பகுதியில் மாவட்ட எஸ்.பி.,க்கும் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மது விற்பனை சரிவு ஏற்படாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், "டாஸ்மாக்' மது விற்பனை துவக்கப்பட்ட 2003 முதல் 2006 வரை மது விற்பனை எட்டாயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்து வந்தது. கடந்த 2007 - 2008 நிதியாண்டில் 10 ஆயிரத்து 486 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை 2008-2009ம் ஆண்டில் 12 ஆயிரத்து 831 கோடியாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து 2009 -2010 நிதியாண்டில் மார்ச் வரை மது விற்பனை 14 ஆயிரத்து 926 கோடியாக அதிகரித்தது. 2010 மார்ச் முதல் டிச.,25 வரை நிதியாண்டு கணக்கீட்டின் படி மது விற்பனை 11 ஆயிரத்து 887 கோடி விற்பனை நடந்துள்ளது. இந்த மது விற்பனை அளவை ஆண்டு கணக்கின்படி (ஜனவரி துவங்கி டிசம்பர் வரை) கணக்கிடும் போது, கடந்த 2009ம் ஆண்டில் மது விற்பனை 13 ஆயிரத்து 981 கோடிக்கு நடந்தது. இந்த மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் அரசு, "டாஸ்மாக்' நிறுவனத்துக்கு 2010ம் ஆண்டுக்கான விற்பனை இலக்கு, 2009ம் ஆண்டு விற்பனையை விட கூடுதலாக 2,000 கோடி என நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால், அரசின் விற்பனை இலக்கை தாண்டி தற்போது மது விற்பனை நிகழ்ந்துள்ளது. 

கடந்த ஜனவரி துவங்கி நடப்பு டிச.,25 வரை 359 நாட்களுக்கு தமிழக "டாஸ்மாக்' கில்16 ஆயிரத்து 445 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது சராசரியாக தினசரி 45. 80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டாயிரத்து 464 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 31ம் தேதி வரை மேலும் ஆறு நாட்களுக்கு கணக்கிட்டால் 274.80 கோடி விற்பனையாகும். மொத்தம் 16 ஆயிரத்து 719.80 கோடிக்கு விற்பனையாகும் என டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.

தமிழக அளவில் "டாஸ்மாக்' மது விற்பனையில் தர்மபுரி, கோவை, சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களை பெற்றுள்ளன. இதில் தர்மபுரி மாவட்டமே மது விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. 
இதில் இருந்து எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்  தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் "டாஸ்மாக்' மது விற்பனையே நிதி ஆதாரமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அளவு அதிகரித்து வருகிறது. இதெல்லாம் எங்க கொண்டு போய் முடியுமோ!!!!

Tuesday, December 28, 2010

Postdoctoral position

Postdoctoral position at IMDEA Materiales (Madrid, Spain) in multiscale simulation of plasticity (DDD and crystal plasticity)

to work on a research project in the area of multiscale simulation of the mechanical behavior of materials within the framework of the European project RADINTERFACES. The selected candidate will work in the study of the meso-scale damage of nanoscale metallic multilayers materials, under the supervision of the project leader. Coupling discrete dislocation dynamics and finite element simulations.

Starting date: As soon as the position is filled.
Requirements: PhD in Material Science/Mechanical
Engineering. Experience in programming (Fortran, C++) and
numerical simulation techniques (discrete dislocation dynamics,
finite elements). Fluent English (oral and written)
Conditions:
Contract with full social security coverage.
Gross Salary:
depending on candidate
Contact: Interested candidates please send
your CV indicating the job reference to: jobs.materials@imdea.org

 

 

Reliability Engineers Job Positions in Microsoft Hardware

There are many job positions on hardware reliability due to the success of on xbox Kinect. The following is the typical description. Please check out http://www.microsoft-careers.com for more.
Reliability Engineer, Senior-IEB-MSCIS (740985) Job

ob Category: Hardware Engineering
Location: WA, Redmond, US
Job ID: 740985-30192
Division: Interactive Entertainment Business


Microsoft is a world leader in the design of entertainment devices. We are looking for a creative, talented and experienced Principal Reliability and Component Engineer. You will be responsible for the design verification and qualification of entertainment devices at the component, sub-system and system levels.
The candidate’s primary responsibility will be the development and implementation of methodologies/techniques to enhance product reliability. The candidate will be required to analyze and test engineering design concepts of electro and opto-mechanical products. He/she will be expected to build reliability into the designs by proposing improvements based on the analyses and test results.
The candidate should possess most (or all) of the following capabilities:
- Understand Physics-of-Failure concepts and be able to develop and implement accelerated tests to mitigate risks and qualify engineering designs during product development.
- Be familiar with using acceleration models for common failure modes in electronic products to estimate field failure rates.
- Capable of applying Design-of-Experiments concepts to develop robust evaluation plans.
- Able to use knowledge of product design and manufacturing to develop Failure Modes and Effects Analysis (FMEA).
- Knowledge of statistical techniques and models is required to analyze test data and estimate product life cycle performance.
- Understand Finite Element Analysis to evaluate product (mechanical and thermal) functional performance as well as address overstress and fatigue-related durability problems.
- Demonstrate a detailed understanding of the significance of time to market, risk mitigation, contingency plans and return on investment.
The candidate will be responsible to:
- Interface with manufacturing partners and component suppliers and develop a strategy for product qualification.
- Standardize methodologies and processes for increased effectiveness of qualifications.
- Monitor product performance in the field and will work closely with manufacturing partners and component vendors to drive the necessary failure analysis and drive corrective actions.
- Work with other functional disciplines to develop specifications for discrete components used in PCB assembly.
- Participate in component vendor selection activity and drive component qualification activity for components that are critical and strategic to Microsoft product requirements.
- Use knowledge of process capability for electronic component production as well as system-level performance requirements to establish Critical-to-Quality performance metrics.
This role will require the candidate to engage on multiple products and with multiple cross-functional teams. A strong skill-set covering analysis, problem solving, communication and vendor management is required.
Qualifications:
- Masters or Doctoral degree in Electrical, Mechanical, Materials Engineering, Physics, or related field.
- 8+ years of work experience preferred, relevant to the capabilities and responsibilities described above and related to the:
reliability and life estimation of electro-mechanical products
design and execution of accelerated life tests to evaluate product reliability
managing multiple design qualification activities and development schedule
- Proven experience in working with external design and manufacturing partners is a plus.
SC:DC

Nearest Major Market: Seattle
Nearest Secondary Market: Bellevue
Job Segments: Electrical, Electrical Engineering, Engineer, Engineering, Hardware Engineer, Management, Manufacturing Engineer, Materials Engineer, Physics, PLM, Product Development, Research, Science, Scientific, Test Engineer
  

Two post-doctoral fellowships : Automated damage localization systems for civil engineering structures: application to cracking


Project description: The goal of vibration based structural health monitoring (SHM) is to replace costly inspection campaigns by real-time instrumentation and automated data processing in order to estimate the current state of health and the remaining lifetime of structures. For damage detection, automated data-based methods using adequate statistical techniques have been developed recently. This project deals with the next level of SHM which is damage localization and focuses on the problem of cracking in prestressed concrete. The challenge is to design a data-based damage localization system based on output-only ambient vibrations. The main ingredients of the proposed method are: (i) the use of very large strain sensor networks, (ii) the development of automated and efficient data processing methods based on local spatial filters or several layers of spatio-temporal filters, and (iii) alarm triggering techniques based on unsupervised learning methods. The major innovation in this project is the use of advanced computational techniques for the creation of a large data set of virtual campaigns which are used for the design and optimization of the SHM system. In addition to these virtual campaigns, experimental developments are also foreseen, with a specific emphasis on the evaluation of different techniques for dynamic strain measurements.

Job environment: The project will be developed in the BATir (Building, Architecture and Town Planning) group of the Université Libre de Bruxelles (ULB). BATir is a joint laboratory between 4 research groups: Structural and Material Computational Mechanics, Civil Engineering and Geotechnics, Architecture, and Town planning. This association aims at creating a multidisciplinary research entity dedicated to every aspect of the art of building. In particular, this project will rely on the availability of large testing facilities (1700 square meters) and powerfull computational resources (numerous in-house and commercial finite element softwares).
Job description : Two post-doctoral positions are open for a period running from January 1st 2011 to December 31 2012.
Elligibility : The candidates should hold a PhD in Mechanical or Civil engineering and should not have been working previously in Belgium. For the first position, experience in numerical modeling preferably in the field of non-linear mechanics or vibrations is necessary. For the second position, experience in experimental vibration testing and instrumentation is required.
Application. Interested candidates should send the following documents electronically to Prof. Arnaud Deraemaeker (aderaema@ulb.ac.be) together with an accompanying letter:
- Detailed CV containing the list of publications
- Copy of the PhD manuscript and PhD certificate
- Two letters of support 


Two In-Situ TEM Post-doc Openings at Sandia National Labs

 We currently have two open post-doc positions in our group here at Sandia National Labs in Albuquerque. We're currently looking for post-docs with a strong TEM background to support two staff members.  The first posting seeks a post-doc for the development of in-situ transmission electron microscopy (TEM) techniques and investigations into the microstructural evolution resulting from thermal processing and irradiation damage in a variety of systems. The second posting seeks a post-doc to support two projets: one using in-situ straining experiments to study deformation mechanisms in metals, and another using a new in-situ TEM gas cell stage to study environmental degradation mechanisms in Zr-alloys. Full details of the postings are attached. Any interested applicants should either contact us directly at khalid.hattar@sandia.gov or blythe.clark@sandia.gov, or submit their CV through the sandia.gov website under the job IDs #636635 or #636655.

 

Nanoscale Polymer Mechanics - Postdoctoral Position, Trinity College Dublin

 Postdoctoral Fellowship at the CRANN Nanotechnology Institute, Dublin, Ireland - Available immediately:  A postdoctoral position in the area of nanoscale polymer mechanics for mechanical nanostructure forming and nanoimprint of soft condensed matter and glass forming systems.


The successful candidate will be responsible for managing several projects in areas such as fundamental studiesof soft matter (polymer) deformation, mechanically directed self assembly, stress state influence on transport in planar devices, and investigations of surface force and pattern influence on the transport, orientation, and sorting of nanoscale objects.   Laboratory work will include implementing nanoindenter actuation feedback and thermal instrumentation,and developing novel forming techniques with a unique three dimensional nanoindentation system.

The Cross group laboratory includes variable temperature nanoindentation and instrumented imprint, three nanoimprint platforms, atomic force microscopy, as well as full access to the CRANN Nanoscience Institute.  This is a state-of-the-art facility located at the downtown Trinity College campus in Dublin.  It includes an advanced microscopy facility (TEM, super SEM, He ion, electron beam lithography, 2 x dualbeam FIB) and extensive nanofabrication cleanrooms.   Collaboration with other research groupswithin CRANN (www.crann.tcd.ie) is an essential part of this position.

Experience in nanomechanics techniques including nanoindentation will normally be required.   Candidates should have a Ph. D. in condensed matter physics or related engineering field.  Demonstrated research accomplishment in at least one of polymer physics, material mechanics, ortribology is required.  Experience in nanolithgraphical processing including focused ion beam milling, electron beam lithographic processing and/or nanoimprint is highly desirable.   The position has one year tenure with possibility for renewal. 

Interested applicants should send a detailed CV with a list of publications to

Dr. Graham Cross
www.grahamcross.net 
Graham.Cross@tcd.ie
NOTE:  Please use the following email subject line: *SFI 2011*


School of Physics and CRANN
Trinity College Dublin
Dublin 2, Ireland
+353 1 896 3024

Ph.D and Postdoctoral associate positions available at Rice University

 

Ph.D and postdoctoral associate positions are available at Rice University in the broad area of atomistic, molecular and multiscale modeling of cement-based materials. The projects include carrying out bottom-up atomistic and microtexture predictive simulations. Computational techniques will be integrated to approaches from statistical mechanics and physical chemistry to provide quantitative predictions of microstructure and properties of cementitious materials across different time- and length-scales. The research will be carried out at Rice University's Laboratory for Multiscale Materials Modeling.
 
For the Post-doctoral position, a Ph.D. in materials science, chemistry, physics, engineering or a related field is required. The candidate should have well-developed computational skills, a strong background and interest in materials modeling and simulation, preferably experience in the areas of atomistic and molecular modeling. Good written and spoken communication skills are expected. 

To apply, please send a CV, several representative publications, and contact information of three references to shahs@mit.edu. Evaluation of candidates will begin immediately and will continue until the position is filled. The Post-doctoral position will start around summer 2011 and will be continued for up to two years. For any questions, please contact Rouzbeh Shahsavari:
Rouzbeh Shahsavari, Ph.D.
Assistant Professor
Principal Investigator, Laboratory for Multiscale Materials Modeling
Department of Civil and Environmental Engineering
Rice University, Houston, TX.
Email: shahs@mit.edu


Research associate position at University of Sheffield


The successful candidate will work on the EPSRC funded research project 'Ultimate and permissible limit state behaviour of soil-filled masonry arch bridges', which is being undertaken in collaboration with the University of Salford and various industrial partners (Network Rail, ADEPT, the International Union of Railways and Balfour Beatty Rail). This is an exciting opportunity to help develop the next generation of analysis and assessment techniques for masonry arch bridges, thus helping to ensure a sustainable future for structures that continue to form a vitally important part of the rail and regional road networks of the UK and other countries.

The successful candidate will develop novel detailed direct analysis models of the soil-structure interactions which take place in a soil-filled masonry arch bridge, extending the scope of conventional limit analysis models. Mathematical optimisation techniques will be used to obtain solutions, and a key challenge will be to then use such techniques to robustly and automatically identify appropriate model parameters from a large body of laboratory test data (which will include Particle Image Velocimetry (PIV) data derived from digital images, to be collected by other project researchers). While the approach will be developed in the context of masonry arch bridges, this is an opportunity to develop new techniques of much broader applicability. 

The successful candidate will hold a PhD (or have equivalent experience) in an engineering, mathematics or physical sciences discipline, and should have experience in one or more of the following areas: mathematical optimization, computational limit analysis, the use of system / parameter identification and/or inverse methods, geotechnical modelling, structural analysis. You will also be highly computer literate, and should have proven programming skills. Due to the nature of the tasks involved it is expected that the post-holder will be a member of the Computational Mechanics and Design Research Group, and an Associate Member of the Geotechnical Engineering Group. 

To apply for this job please click here and search for the job using the reference number provided or to view current vacancies and apply online please go to: www.sheffield.ac.uk/jobs.

Research Position in Computational Mechanics at Sandia National Laboratories in Livermore, CA


Job Details

A full-time position is available at Sandia National Laboratories in Livermore, California for an applied mechanics engineer with a strong background in computational solid mechanics, numerical methods and constitutive model development.

The work will support our current projects in the areas of environmental effects, continuum plasticity, and the micromechanics of failure. The engineer will be expected to develop and implement advanced models into both open-source research and proprietary production computer codes for  high-performance computing simulations. In addition, the successful candidate will collaborate with structural analysts to apply these models to Sandia applications.

Required

A PhD in applied mechanics or a related field is required for this position. Candidates must have significant experience in the numerical aspects of the finite element method and constitutive model development.
The following qualifications are also required: (1) strong communication skills; (2) the ability to function in a team environment with other developers, analysts, and department customers; (3) the demonstrated ability to publish in technical journals; and (4) proficient programming skills.


Desired

Desired qualifications include (1) knowledge of materials science; (2) experience in modifying the fundamental components of the finite element method in computer codes; (3) a background in applied mathematics and numerical analysis; and (4) proficiency in C++ programming.


Department Description

The Mechanics of Materials Department (8246) performs experimental and analytical studies to understand the mechanical behavior of materials. Our experimental work covers the entire discovery-characterization-validation spectrum. Motivated by observations, we develop models to simulate material responses under various loading and environmental conditions.

The fidelity of our models and simulations varies from atomic to continuum scales. Our experimental capabilities include characterizing materials over a wide range of temperatures and strain rates, developing micro- and nanoscale strain and displacement diagnostics, and testing subsystems to support model validations. In addition, we develop numerical methodologies so that our material models can be implemented in high-performance computing simulations.

More Information and How to Apply

Go to the Sandia Careers web site and search for Job ID 636444 at this URL:
https://ws03snlntz.sandia.gov/psp/applicant/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS...


Postdoctoral Fellowship at Temple University, Philadelphia, Pennsylvania, USA

Multiple one-year Postdoctoral appointments in the Mechanical Engineering Department, Temple University, are available immediately with possibility for annual renewal up to three years.

Salary and benefits are competitive, with compensation commensurate with experience.
This position will assist an interdisciplinary research team working on the design of smart materials for biomedical applications. The applicant is expected to have a strong and documented background in several of the following areas: smart materials (preferably nitinol), finite element, mechanical design, and controls. A Ph.D. in Mechanical/Aerospace/Bio/Materials engineering is required. 

Qualified applicants should submit ALL of the following by e-mail to Dr. Parsaoran Hutapea, Associate Professor of Mechanical Engineering, hutapea@temple.edu:
• a single-page statement of interest
• a curriculum vitae including a publications list
• pdf files of three publications
• names and contact information for three references

For more details of the project, please contact Dr. Hutapea by email only.

EEO/AA Policy: 
Temple University is an equal-opportunity employer, located in Philadelphia, Pennsylvania and it pledges not to discriminate on the basis of race, color, gender, sexual orientation, age, national origin, disability status, marital status or veteran status.

Three Postdoctoral positions at the University of Oxford: Brain modelling, soft-tissues, and water filtration

The Mathematical Institute at Oxford is advertising three post-doctoral positions within the Oxford Centre for Collaborative Applied Mathematics for(ideally) a 1st April 2011 start. The project titles (with links for more information) are:

1. Brain Mechanics, Cortex Folding, and Pattern Formation in Growing Tissues.
http://www.maths.ox.ac.uk/node/1405

This project will be supervised by Dr. Sarah Waters, Dr. Dominic Vella, and myself at Oxford, in close collaboration with Prof. Tamer El-Sayed and Prof. Sahraoui Chaieb from the King Abdullah University of Science and Technology (KAUST)
I am particularly interested in candidates with a solid background in computational solid mechanics and applied mathematics. 


2. A framework for hybrid discrete/continuous multiscale modelling of biological tissues
http://www.maths.ox.ac.uk/node/14052

 
3. Mathematical Modelling of Membrane Filtration of Water
http://www.maths.ox.ac.uk/node/14048

 
The successful candidate will join, OCCAM a well-funded and dynamic research centre in Applied Mathematics at the University of Oxford.